Showing posts with label வைரம் கடத்தல். Show all posts
Showing posts with label வைரம் கடத்தல். Show all posts

வைரம் கடத்தல் :இந்தியருக்கு தண்டனை

>> Tuesday, December 22, 2009

தென் ஆப்ரிக்க நாடான காங்கோவிலிருந்து இந்தியாவுக்கு வைரங்களை கடத்த முயன்ற இந்திய வியாபாரிக்கு, ஆறு மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்தவர் அஜூதியா பிரவின்குமார். காங்கோவில் வைர வியாபாரம் செய்து வந்தார். கடந்த பத்தாம் தேதி இந்தியா புறப்பட்ட குமாரிடம், அவரது உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தபோது 42 ஆயிரம் காரட் மதிப்புள்ள பட்டை தீட்டப்படாத வைரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ஐந்து லட்சம் அமெரிக்க டாலர். இதையடுத்து, குமாரை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். வைர வியாபாரி குமாருக்கு ஆறு மாதம் ஜெயில் தண்டனை விதித்து கின்ஷாசா கோர்ட் உத்தரவிட்டது.உலகிலேயே காங்கோ குடியரசில் தான் அதிகப்படியான வைரங்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாக, அந்நாட்டில் வைரங்கள் கடத்தப்படுவது மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP