இந்தியாவுடன் 1000 ஆண்டு யுத்தத்திற்கு தயார்: சர்தாரி
>> Thursday, January 7, 2010
காஷ்மீர் பிரச்னைக்காக இந்தியாவுடன் 1000 ஆண்டுகள் கொள்கை யுத்தம் நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.
ஆஸாத் ஜம்மு காஷ்மீர் சட்டசபை மற்றும் காஷ்மீர் கவுன்சிலின் கூட்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர், இது (காஷ்மீர் பிரச்னை) ஒரு கொள்கை யுத்தம் என்றும், தலைமுறைத் தலைமுறையாக இது நீடிக்கும் என்றும் கூறினார்.
காஷ்மீர் பிரச்னையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் ஜனநாயக அரசுகள் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிராந்திய அமைதிக்கும், நீண்ட காலமாக இருந்துவரும் காஷ்மீர் பிரச்னைக்கான தீர்வுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறிய சர்தாரி, காஷ்மீருக்கான அமைதியிலிருந்து பிராந்திய அமைதியை பிரித்துவிட முடியாது என்றார்.
இந்த எண்ணத்தை உலக நாடுகளிடையே பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும், தொடர்ந்து அதனை முன்னெடுத்து செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார்.
காஷ்மீர் பிரச்னை தொடர்பாக சர்வதேச சமூகம் ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கான நேரம் விரைவிலேயே வரும் என்றும், அமைதியாக வாழ்வதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சர்தாரி மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment