ஐ.நா. அமைதிப் படையினர் உயிரிழப்பு

>> Wednesday, January 13, 2010



ஹைடியில் நடந்த நிலநடுக்கத்தில் ஐநாவுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
போர்த்-ஓ-பிரன்ஸ் நகரில் உள்ள அதன் தலைமையகம் முற்றாக இடிந்து போய்விட்டது. அங்கு பணியாற்றிய தலைமை அதிகாரியான ஹேடி அன்னாபியும், அவரோடு உடன் பணியாற்றிய பலரும் என்ன ஆனார்கள் என்பது குறித்து தெரியவில்லை.
பிரேசிலும், ஜோர்டானும் அங்கு பணியில் இருந்து தமது நாட்டு படையினர் உயிர் இழந்ததாக தெரிவித்துள்ளன. தமது நாட்டை சேர்ந்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளதாக சீனா கூறியுள்ளது.
பாக்தாத்தில் தனது கட்டிடத்தில் 2003 ஆம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பிறகு இதுதான் ஐ.நா. சந்திக்கும் பெரிய சவால் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் நியூயார்க் நகரில் தெரிவித்துள்ளார்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP