பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை மரணம

>> Thursday, January 7, 2010


கொழும்பில் தனி இடமொன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தந்தை ‌திருவேங்க‌டம் வேலுப்பிள்ளை (86), இன்று காலை மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே இறந்ததாகவும் இலங்கை இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக நோய்வாய்பட்டிருந்த வேலுப்பிள்ளைக்கு, எந்த வகையான மருத்துவ உதவிககள் அளிக்கப்பட்டது என்றோ, அல்லது எந்த நோயின் தாக்கம் காரணமாக அவர் இறந்தார் என்பது பற்றியோ இராணுவத் தரப்பு கூற மறுத்துள்ளது.

அவரது உடலை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்தும் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை.

வேலுப்பிள்ளை தடுத்து வைக்கப்பட்ட அதே இடத்திலேயே பிரபாகரனின் தாயாரும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிலையும் பெரும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் கிடைக்கிறது அல்லது மருத்துவ உதவிகள் சரிவரக் கிடைக்கின்றனவா என்பதே மிகுந்த சந்தேகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP