அல் - காய்தாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஏமன் அறிவிப்பு

>> Monday, January 11, 2010

பயங்கரவாதத்தை கைவிட்டு விட்டு ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வரும் அல் - காய்தா தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலேக் அறிவித்துள்ளார். அல் - காய்தா தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏமனை அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அலி அப்துல்லா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அல் - காய்தா சவால்களை சமாளிக்க தமது அரசாங்கம் உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும், வன்முறையை கைவிட மறுக்கும் அல் - காய்தாவினரை ராணுவத்தினர் ஒடுக்குவார்கள் என்றும் அலி அப்துல்லா மேலும் தெரிவித்துள்ளார் .

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP