நிதி நெருக்கடியிலிருந்து வங்கிகளைக் காப்பாற்ற வழங்கப்பட்ட அரசு நிதியைத் திரும்பக் கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டம்

>> Thursday, January 14, 2010


நிதி நிறுவனங்களை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற அரசுக்கு ஏற்பட்ட செலவின் பெரும் பகுதியை வங்கிகளிடம் இருந்து பெரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் அறிவிக்கவுள்ளார்.

இது பற்றிய விபரங்கள் சில ஏற்கனவே வெளிவந்துள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம் 117 பில்லியன் டாலர்கள் கட்டம் கட்டமாக பல வருட காலத்தில் திரும்பப் பெருவது என ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

50 பில்லியன் டாலர்களுக்கு மேலான உடைமை வைத்துள்ள வங்கிகள் தமது வரவு செலவு அறிக்கையைப் பொறுத்து தீர்வு ஒன்றை கட்ட வேண்டும்.

அமெரிக்க அரசிடம் நிதி உதவியை திரும்ப கட்டி நிறுவனங்களுக்கும், நிதி உதவியைப் பெறாத நிறுவனங்களுக்கும் கூட இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP