பேச்சுவார்த்தைக்கு உல்ஃபா: கோகாய் நம்பிக்கை
>> Friday, January 8, 2010
அஸ்ஸாம் விடுதலைக்காக போராடிவரும் தீவிரவாத இயக்கமான உல்ஃபா பேச்சுவார்த்தைக்கு வரும் சாத்தியம் உள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.
கொல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கோகாய், “தங்களுடைய கோரிக்கை குறித்து விவாதிக்க அவர்கள் முன்வருவார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. விரைவில் எழுத்துப்பூர்வமாக அவர்களின் கோரிக்கை வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.
அஸ்ஸாமின் இறையாண்மை தவிர்த்து மற்ற அனைத்துக் கோரிக்கைகள் குறித்தும் பேசத் தயார் என்று கூறியுள்ள கோகாய், உல்ஃபா அமைப்பின் தலைமைத் தளபதி பரேஷ் பரூவா இல்லாமலேயே பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதெனவும், வேலைவாய்ப்பின்மையே தீவிரவாதம் வளர்வதற்குக் காரணம் என்றும் கூறியுள்ளார்.
உல்்பா அமைப்பின் தலைவர் அரபிந்தோ ராஜ்கோவா வங்க தேசத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தற்போது சிறையில் உள்ளார்.
0 comments:
Post a Comment