காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக இந்தியா கூறுகிறத

>> Friday, January 8, 2010


இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் மாநிலத்தின ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் இருந்த விடுதியை தாம் தாக்கி அதிலிருந்த 2 தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் மூலம் அங்கே 24 மணிநேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஒருவர் பாகிஸ்தானிய பயங்கரவாத இயக்கமான, லஷ்கர் இ தோயிபாவைச் சேர்ந்தவர் என்று மாநில காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று, ஐன நெருக்கடி மிக்க சந்தைப் பகுதியில் கையெறிகுண்டுகளை வீசிய தீவிரவாதிகள் அதன் பிறகு அங்கே துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர்.

அதன் பிறகு அவர்கள் ஒரு ஒட்டலில் பதுங்கினர். இந்திய ஆளுகைக்கு எதிராக காஷ்மீரில் நெடுங்காலமாக கிளர்ச்சி நடைபெற்று வருகிறது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP