கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் நீரில் மூழ்கி பலி

>> Friday, January 15, 2010

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே ஆட்டோ கால்வாயில் கவிழ நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை மாங்காடு அருகே வசிப்பவர் ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தராஜ், இவருக்கு வயது 35. இவரது மனைவி, மாமியார் மற்றும் இன்னும் சில உறவினர் ஆகியோருடன் சரவணன், வேலு என்ற 8 மற்றும் ஒரு வயது சிறார்களும் அடங்கிய குடும்பத்துடன் பட்லூர் அங்காளம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.
அதன் பிறகு அனைவரும் அதே ஆட்டோவில் நேற்று இரவு 8 மணிக்கு பெரியபாளையம் கோவிலுக்குச் சென்றனர். அப்போது கால்வாய் அருகே சென்ற போது ஆட்டோ எதிர்பாராத விதமாக கால்வாயில் கவிழ்ந்தது.இதில் 6 பேரும் பலியானார்கள். காலையில் கால்வாயில் ஆட்டோ மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காவல்துறைக்குத் தகவல் அனுப்பினர்.
தீயணைப்புப் படையினர் ஒரே ஒரு உடலை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. மீதி 5 பேரின் உடல்களையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Read more...

இந்தியரைத் தாக்கிய ஆஸ்ட்ரேலிய நபருக்கு 3 மாதம் சிறை

இந்திய கார் ஓட்டுனர் ஒருவரை நிறவெறி வசை செய்து, தாக்கிய ஆஸ்ட்ரேலிய் நபருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 3 மாதகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.ஆஸ்ட்ரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பல்லார்ட் என்ற இடத்தைச் சேர்ந்த பால் ஜான் பிராக்டன் என்ற ஆஸ்ட்ரேலியர் இந்திய டாக்ஸி டிரைவர் சதீஷ் தடிபமுலா என்பவரின் காரில் பயணம் செய்தார்.ஆனால் நன்றாக குடித்திருந்த பிராக்டன், டிரைவர் தன்னை எங்கோ அழைத்துச் செல்கிறார் என்று தவறாக நினைத்துக் கொண்டு, தகாத வார்த்தைகளால் அவரது பிறப்பையும், இந்தியாவையும் கடுமையாக திட்டிய படியே தக்கியுள்ளார்.இதில் அவரது காரும் சற்றே சேதமடைந்தது. இதனையடுத்து அந்த ஆஸ்ட்ரேலியருக்கு 3 மாத கால சிறை வாசம் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

Read more...

இந்தியரைத் தாக்கிய ஆஸ்ட்ரேலிய நபருக்கு 3 மாதம் சிறை

இந்திய கார் ஓட்டுனர் ஒருவரை நிறவெறி வசை செய்து, தாக்கிய ஆஸ்ட்ரேலிய் நபருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 3 மாதகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.ஆஸ்ட்ரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பல்லார்ட் என்ற இடத்தைச் சேர்ந்த பால் ஜான் பிராக்டன் என்ற ஆஸ்ட்ரேலியர் இந்திய டாக்ஸி டிரைவர் சதீஷ் தடிபமுலா என்பவரின் காரில் பயணம் செய்தார்.ஆனால் நன்றாக குடித்திருந்த பிராக்டன், டிரைவர் தன்னை எங்கோ அழைத்துச் செல்கிறார் என்று தவறாக நினைத்துக் கொண்டு, தகாத வார்த்தைகளால் அவரது பிறப்பையும், இந்தியாவையும் கடுமையாக திட்டிய படியே தக்கியுள்ளார்.இதில் அவரது காரும் சற்றே சேதமடைந்தது. இதனையடுத்து அந்த ஆஸ்ட்ரேலியருக்கு 3 மாத கால சிறை வாசம் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

Read more...

கன்னியாகுமரியில் நன்றாகத் தெரியும் கங்கன கிரகணம்


இந்த நூற்றாண்டின் அதிசய நீண்ட நேர சூரிய கிரகணத்தைக் காண கன்னியாகுமரியிலும் ராமேஸ்வரத்திலும் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ள நிலையில் அங்கு கங்கணம் போட்ட சூரிய கிரகணம் அற்புதமாக தெரிந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 108 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் இந்த கிரகணம் தெரிவிதால் பொது மக்கள் இதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.வானில் கண் போன்று தெரிந்த அந்த கங்கண கிரகண வடிவத்தை மக்கள் கண்டு உற்சாகமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரட்னூ, பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகளியில் சிறப்பு தொலைக்காட்சிப் பெட்டிகளை அமைத்து இதனைக்காண சிறப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாக தெரிவித்தார். பிளாஸ்மா தொலைக்காட்சிப் பெட்டியுடன் நுண்ணோக்கி ஒன்று இணைக்கப்பட்டதனால் கங்கண வடிவம் அபாரமாக தெரிந்தது என்று அதைக்கண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

25 மாநிலங்களிலிருந்து சுமார் 750 மாணவர்கள் இதனைக் காண வந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.மிஜோரம் மாநிலத்தில் 3.15 மணிக்கு கிரகணம் விடுகிறது.

Read more...

இந்திய விளையாட்டுப் பொருட்களில் நச்சு இரசாயனங்கள்


இந்தியாவில் விற்கப்படுகின்ற பல பிளாஸ்டிக் விளையாட்டு சாமான்களில், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கக்கூடிய நச்சு இரசாயனங்கள் உள்ளன என்று இந்தியாவின் முன்னணி சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு கூறியுள்ளது.
பிளாஸ்டிக்கை மென்மையாக்க உதவும் ப்தாலேட்ஸ் எனப்படும் நச்சு இரசாயனம் விளையாட்டு சாமான்கள் உற்பத்தித் துறையினரால் பயன்படுத்தப்படுவது தொடர்பில் இந்தியாவில் எவ்வித ஒழுங்கு விதியும் இல்லை என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறுகிறது.
இந்தியாவில் விற்கப்பபடும் பலவித விளையாட்டுப் பொருட்களையும் ஆராய்ந்த இந்தக் குழு, அவற்றில் அதிக அளவில் தாலேட்ஸ் இரசாயனம் இருப்பதாக கண்டறிந்துள்ளது.
கிட்டத்தட்ட பாதியளவிலான விளையாட்டுப் பொருட்களில், சர்வதேச ரீதியில் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான இரசாயனம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

Read more...

இரானிய போராட்டங்களுக்கு குறுந்தகவல்களைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை


செல்லிடத் தொலைபேசி குறுந்தகவல் சேவையையும் மின் அஞ்சல் சேவையையும் பயன்படுத்தி இரானின் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு எதிராக இரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் போன்றவை கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், அவற்றை அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்க எடுக்கப்படும் எனவும் இரானின் காவல்துறை தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் திட்டங்களை பரப்புவதென்பது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயல் என்று அவர் கூறினார்.
இரானில் சென்ற வருடம் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செய்திருந்த போராட்டங்களின் எதிரொலியாக சீர்திருத்த ஆதரவு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களை அரசாங்கம் மூடியிருந்தது. செல்லிட தொலைபேசி குறுந்தகவல் சேவைகளையும் அரசாங்கம் நிறுத்திவைத்திருந்தது.

Read more...

இரானிய போராட்டங்களுக்கு குறுந்தகவல்களைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை

செல்லிடத் தொலைபேசி குறுந்தகவல் சேவையையும் மின் அஞ்சல் சேவையையும் பயன்படுத்தி இரானின் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு எதிராக இரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் போன்றவை கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், அவற்றை அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்க எடுக்கப்படும் எனவும் இரானின் காவல்துறை தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் திட்டங்களை பரப்புவதென்பது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயல் என்று அவர் கூறினார்.
இரானில் சென்ற வருடம் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செய்திருந்த போராட்டங்களின் எதிரொலியாக சீர்திருத்த ஆதரவு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களை அரசாங்கம் மூடியிருந்தது. செல்லிட தொலைபேசி குறுந்தகவல் சேவைகளையும் அரசாங்கம் நிறுத்திவைத்திருந்தது.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP