டோகோ கால்பந்தாட்ட வீரர்கள் மீதான தாக்குதல்: சந்தேகநபர்கள் இருவர் கைது

>> Monday, January 11, 2010


கடந்த வெள்ளிக்கிழமையன்று டோகோ நாட்டு கால்பந்து அணி மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக அங்கோலாவின் அரச கட்டுபாட்டு வானொலி தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளம் மிகுந்த கபிண்டாப் பகுதியில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதிக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கோரி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.
இதனிடையே அங்கோலாவில் நடைபெற்றுவரும் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டிகளிலிருந்து விலகிக்கொள்வதாக டோகோ நாட்டு அணி விடுத்த வேண்டுகோளை ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம் நிராகரித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக அனுஷ்டிக்கப்படும் மூன்று நாள் தேசிய துக்கத்தில் பங்கு பெறுவதற்காக, டோகோ நாட்டு அரசின் உத்தரவுக்கமைய அந்நாட்டு அணி நாடு திரும்பியுள்ளது.
தமது நாட்டின் அணியின் மீது மறைந்திருந்தவர்கள் நடத்திய தாக்குதல் ஆப்பிரிக்க கால்பந்து விளையாட்டுக்கே ஏற்பட்ட ஒரு வெட்கக்கேடான செயல் என்று டோகோவின் பிரதமர் வர்ணித்துள்ளார்.
தங்களது நாட்டு அணியின் பாதுகாப்பை அங்கோலா அரசு உறுதிசெய்யத் தவறிவிட்டது என்று கூறி அந்நாட்டை டோகோவின் பிரதமர் விமர்சித்துள்ளார்

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP