டோகோ அணி நாடு திரும்பும் - பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு

>> Sunday, January 10, 2010

அங்கோலாவில் நடைபெறுகின்ற ஆப்பிரிக்க கோப்பை கால் பந்தாட்டப் போட்டிகளிலிருந்து மீள அழைத்துக் கொள்ளப்பட்ட தமது அணியினர் இன்று ஞாயிற்றுகிழமை நாடுதிரும்பவுள்ளதாக டோகோ பிரதமர் தெரிவித்துள்ளார்.

கபிந்தாவில் டோகோ அணியினரின் பஸ் மீது கடந்த வெள்ளிகிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

டோகோ அணியிலுள்ள சில விளையாட்டு வீரர்கள் தொடர்ந்தும் விளையாட வேண்டும் என தெரிவித்த போதிலும் அணியின் பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அங்கோலா பிரதமர் கில்பர்ட் ஹொங்போ தெரிவித்தார்.

தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து தமக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லையெனவும் அங்கோலா பிரதமர் ஆப்பிரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்தை விமர்சித்துள்ளார்


0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP