மீண்டும் மோட்டார் கார்பந்தய போட்டிகளில் ஷூமாக்கர

>> Wednesday, December 23, 2009


மோட்டர் பந்தய போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றிருந்த ஜெர்மனியின் மோட்டார் கார் பந்தைய வீரரான மைக்கேல் ஷூமாக்கர், தான் அடுத்த ஆண்டு பார்முலா ஒன்று போட்டிகளில் மெர்சிடிஸ் அணிக்காக பங்கேற்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தான் முன்பு இருந்தது போலவே உறுதியுடன் இருப்பதாகவும் உலக சாம்பியன்ஷிப்பை பெற வேண்டும் என்று குறிவைத்துள்ளதாகவும் ஷிமாக்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.

இதுபற்றி தன்னிடம் இருந்த ஆவல் மீண்டும் அதிகமாகியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஷூமாக்கர் தனது முந்தைய அணித்தலைவர் ராஸ் பிரானுடன் மீண்டும் சேரவுள்ளார்.

இவர்கள் ஏழு உலகப் போட்டிகளை வென்றுள்னர். இதில் ஐந்து பெராரி அணிக்காக பங்கேற்றபோது பெற்ற வெற்றிகளாகும்.

Read more...

இந்திய விசா இந்திய விசா நடைமுறைகளில் புதிய விதிமுறைகள் புதிய விதிமுறைகள


இந்தியாவுக்கு சென்று திரும்பும் வெளிநாட்டவர்கள், இரு மாதங்களுக்குள் அங்கு மீண்டும் செல்வதை தடுக்கும் வகையில், நீண்ட கால சுற்றுலா விசாக்களுக்கு இந்தியா கடுமையான விதிகளை கொண்டுவருகிறது.

விசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகவே இந்த புதிய விதிகள் கொண்டுவரப்படுவதாக ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

முன்னைய விதிகளின்படி 5 முதல் 10 வருட கால விசாவை வைத்திருப்பவர்கள் 180 நாட்களுக்குள் நாட்டில் இருந்து வெளியேற வேண்டும்.

வணிக மற்றும் தொழில் விசாக்களைப் பெறுவதற்கான கஸ்டமான நடைமுறைகளை தவிர்ப்பதற்கான குறுக்கு வழியாக இதனை பல வெளிநாட்டவர்கள், குறிப்பாக அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் பிரஜைகள் பயன்படுத்துகின்றனர்.

இந்த மாற்றங்கள் சீரற்ற வகையில் பிரயோகிக்கப்படுவதாக கூறுகின்ற டெல்லிக்கான அமெரிக்கத் தூதரகம், தமது நாட்டவர்கள் பலரை இது பாதிக்கும் என்றும் கூறியுள்ளது

Read more...

இரானில் மூத்த மதகுரு ஒருவரின் வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு


கடந்த ஞாயிறன்று காலமான இரானின் செல்வாக்கு மிகுந்த, அரசுக்கு எதிரான கொள்கையை கொண்டிருந்த அதியுயர் மதத்தலைவர்களில் ஒருவரான அயதொல்லா ஹொசைன் அலி மொண்டசாரிக்கு அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பு விடுத்த மூத்த மதகுரு ஒருவரின் வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளதாக எதிர்க்கட்சியினரின் இணையத்தளங்கள் கூறுகின்றன.

இஸ்ஃபகானில் நடந்த வைபவத்தில் பொதுமக்கள் கலந்துகொள்வதை பாதுகாப்புப் படையினர் தடுத்த போது மோதல்கள் வெடித்ததாக அந்த இணையத்தளங்கள் கூறுகின்றன.

திங்களன்று குவாமில் நடந்த அஞ்சலி நிகழ்வும் இடையூறு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சியினரின் போராட்டங்களுக்கான ஆதரவு பல இடங்களுக்கும், முதியவர்கள் மற்றும் மத ரீதியிலான பழமைவாதிகள் மத்தியிலும் பரவுவதாகத் தென்படுவதாக பிபிசியின் தெஹ்ரானுக்கான நிருபர் கூறுகிறார

Read more...

வைரம் கடத்தல் :இந்தியருக்கு தண்டனை

>> Tuesday, December 22, 2009

தென் ஆப்ரிக்க நாடான காங்கோவிலிருந்து இந்தியாவுக்கு வைரங்களை கடத்த முயன்ற இந்திய வியாபாரிக்கு, ஆறு மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்தவர் அஜூதியா பிரவின்குமார். காங்கோவில் வைர வியாபாரம் செய்து வந்தார். கடந்த பத்தாம் தேதி இந்தியா புறப்பட்ட குமாரிடம், அவரது உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தபோது 42 ஆயிரம் காரட் மதிப்புள்ள பட்டை தீட்டப்படாத வைரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ஐந்து லட்சம் அமெரிக்க டாலர். இதையடுத்து, குமாரை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். வைர வியாபாரி குமாருக்கு ஆறு மாதம் ஜெயில் தண்டனை விதித்து கின்ஷாசா கோர்ட் உத்தரவிட்டது.உலகிலேயே காங்கோ குடியரசில் தான் அதிகப்படியான வைரங்கள் கிடைக்கின்றன. இதன் காரணமாக, அந்நாட்டில் வைரங்கள் கடத்தப்படுவது மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

கூவத்தை சுத்தப்படுத்த முடியுமா?



தமிழக தலைநகர் சென்னையின் நிரந்தர பிரச்சினை களில் ஒன்று அங்கே ஓடும் கூவம் ஆறு. கூவம் என்றதும், அதன் அழுக்கும், அதிலிருந்து வீசும் மூக்கை துளைக்கும் துர்நாற்றமும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.

அந்த நிலையை மாற்றப்போவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் துணை முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த காலங்களில் திமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் கூவத்தை சுத்தப்படுத்தி அதில் படகு விடப்போவதாக அறிவிப்புக்களை செய்திருந்தா லும், அவையெல்லாம் வெறும் அறிவிப்புக்களாகவே இருந்தனவே தவிர, அவற்றில் பெரிதாக முன்னேற் றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், தமிழக அரசின் தற்போதைய அறி விப்பு உண்மையான பலன் தருமா அல்லது கடந்த கால அறிவிப்புக்களைப்போல செயலாக்கம் பெறா மலே போகுமா என்பதை ஆராயும் பெட்டகம். தயாரித்து வழங்குகிறார் சென்னை செய்தியாளர் டி என்.கோபாலன்.

Read more...

கம்ப்யூட்டர் தகவலை தகர்த்து ஐந்து கோடி ரூபாய் கொள்ளை

"சிட்டி வங்கியில், ஐந்து கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட காரணமாக அமைந்த, கம்ப்யூட்டர் பாதுகாப்பு தகர்ப்பு குறித்து, பெடரல் புலனாய்வு நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. இதில், ரஷ்யாவின் சைபர் குழுவிற்கு தொடர்பிருக்கலாம்' என, அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

"ஹேக்கிங்' என்பது கம்ப்யூட்டர் மென்பொருளில் இருந்து அடிப்படைத் தகவல்களை திருடும் நுண்கலையாகும். இதை இத்துறையில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள் மட்டுமே கையாள முடியும். ஆகவே, ரஷ்யாவில் உள்ள நுணுக்கம் தெரிந்த, "சைபர் குழு' ஈடுபட்டிருக்கிறது என்று சந்தேகிக்கப்படுகிறது.இது குறித்து அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:சிட்டி வங்கியின் முதன்மை நிறுவனமான, சிட்டி குழுமத்தில், அரசுக்கு தற்போது 27 சதவீதம் பங்குகள் உள்ளன. ரஷ்ய வர்த்தக நெட்வொர்க்கில் இருந்து, இணையதள முகவரி மூலமாக, சந்தேகப்படும் வகையிலான பரிவர்த்தனைகள் நடைபெறுவதை, அமெரிக்க முதலீட்டாளர்களே முதலில் கண்டறிந்தனர்.

இதற்கு தேவையான சாதனங்கள் மற்றும் மென்பொருட்களை ரஷ்ய குழு ஒன்று விற்பனை செய்கிறது.இவர்கள், பணத்தை கொள்ளையடிப்பதோடு, வங்கி தொடர்பான தகவல்களை அழித்துவிடலாம் என, பாதுகாப்பு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகரைச் சேர்ந்த ராபர்ட் பிளான்கார்டு என்பவர், யாரோ, சிட்டி வங்கியில் உள்ள தன் கணக்கில் இருந்து, ஐந்து கோடி ரூபாயை திருடியதாக தெரிவித்துள்ளார். பின்னர், அந்த பணம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Read more...

பெண்ணை கொடுமை செய்தவர்களுக்கு காது மற்றும் மூக்கை வெட்ட உத்தரவு


பாகிஸ்தானில் இரு ஆண்களுக்கு அவர்களது மூக்கையும் காதுகளையும் வெட்டி எடுத்துவிடுவது என்ற ஒரு தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இவர்கள் இருவரில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள மறுத்திருந்த பெண்ணொருத்தியின் மூக்கையும் காதுகளையும் இவர்கள் வெட்டியிருந்தனர்.


பெண்ணைக் கடத்தி சித்ரவதை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆடவர் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.


கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்ற இஸ்லாமிய தண்டனை விதிக்கு ஏற்ப இந்த தீர்ப்பை வழங்குவதாக லாகூர் நகர நீதிபதி கூறியுள்ளார்.


ஆனால் கடந்த காலங்களில் இவ்வகையான தண்டனைகள் மேல்முறையீட்டின்போது மாற்றப்பட்டு வந்துள்ளன என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

Read more...

கப்பல் பழுது நீக்கம் :28 இந்தியர் தப்பினர்

இன்ஜின் கோளாறால் கடலில் தத்தளித்த 28 இந்தியர்கள் அடங்கிய சரக்குக் கப்பல், பழுது நீக்கப்பட்டு, நேற்று போர்ட்லாந்து புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து அலாஸ்காவில் இருந்து அமெரிக்க கடலோரக் காவல் படையைச் சேர்ந்த அதிகாரி சீன் டெர்ரி கூறியதாவது:சீனாவில் இருந்து அமெரிக்காவின் போர்ட்லாந்து நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஏ.பி.ஜே.,சூர்யாவீர். இந்த சரக்குக் கப்பலில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் கோளாறால், அது, அலாஸ்கா கடற்பகுதியில் நிறுத்தப்பட்டது. கடலில் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக, நிலைமை மிகவும் மோசமானது.இதையடுத்து அவர்கள், அமெரிக்க கடலோரக் காவல் படையின் உதவியை கோரினர். இந்நிலையில், அந்த கப்பலில் இருந்த இன்ஜினியர்கள், அதன் இன்ஜினை உள்ளூர் நேரப்படி, இன்று (நேற்று) காலை 8.20 மணியளவில் சரி செய்தனர். அதன் பின், அந்த கப்பல், போர்ட்லாந்து புறப்பட்டுச் சென்றது.அந்த கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இவ்வாறு சீன் டெர்ரி கூறினார்.

Read more...


புலி ஒன்றை கொன்று, தின்ற குற்றத்துக்காக சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு 12 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தென் மாகாணமான, யூனானில் தான் மீன் பிடிக்கச் செல்லுகையில், புலி தன்னை தாக்க வந்ததாகவும், தான் தற்பாதுகாப்புக்காக எதிர்த்தாக்குதல் நடத்தியதில் அந்தப் புலி செத்துவிட்டதாகவும் சம்மந்தப்பட்ட நபர் கூறியுள்ளார்.


கொல்லப்பட்ட புலி, அழிவின் விளிம்பில் இருக்கும், இந்தோசீன வகை புலியினத்தை சேர்ந்த வனத்தில் வாழும் கடைசி புலியாக இருக்கலாம் என்று யூகம் நிலவுகிறது.


புலியின் இறைச்சியை உண்ட குற்றத்திற்காகவும், இந்த சம்பவத்தை மூடி மறைக்க முற்பட்ட குற்றத்திற்காகவும் வேறு நான்கு பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

Read more...

வங்க மொழியை ஐ. நாவின் அதிகாரப்பூர்வ மொழியாக்கக் கோரிக்கை


வங்க மொழி ஐ நாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும் என்று வங்கதேச அரசு கோரியுள்ளதை ஆதரித்து ஒரு தீர்மானத்தை மேற்கு வங்க சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ளது.

வங்க மொழி 25 கோடி மக்களால் பேசப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்திலும், வங்கதேசத்திலும் வசிப்பவர்கள்.


இந்த கோரிக்கையை ஐ நா வுக்கு இந்திய நடுவணரசு அரசு அனுப்ப வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


செப்டம்பர் மாதம் ஐ நாவின் பொதுச் சபையில் பேசுகையில் வங்க மொழியை ஐ நாவின் அலுவல் மொழியாக்க வேண்டும் என்று வங்க தேசப் பிரதமர் ஷேக் ஹசீனா வாதிட்டிருந்தார்

Read more...

கோபன்ஹேகன் மாநாடு பெரும் தோல்வி என்கிறது ஸ்வீடன்


கோபன்ஹேகனில் சென்றவாரம் நடந்து முடிந்த காலநிலை மாநாடு ஒரு பெருந்தோல்வி என்று ஸ்வீடன் சுற்றாடல் அமைச்சர் அந்திரியாஸ் கார்ல்க்ரென் வர்ணித்துள்ளார்.


பருவநிலை மாற்றம் தொடர்பில் அடுத்து என்ன செய்வது என்று விவாதிக்கும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின் கூட்டத்துக்காக பிரஸ்ஸல்ஸ் வந்திறங்கிய கார்ல்ஜென், நிஜமாகவே மாநாடு ஒரு மாபெரும் தோல்வி என்று கூறினார்.


ஐரோப்பிய ஒன்றியமும், உலகின் மற்ற பாகங்களும், இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டு,மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாடு சிரமங்களும் சிக்கல்களும் நிறைந்திருந்தது என்றும் இதில் சிறியதொரு முன்னேற்றமே காணப்பட்டுள்ளது என்றும் ஜெர்மன் சுற்றுச்சூழல் அமைச்சர் நொர்பெர்ட் ரொயெட்ஜென் வர்ணித்துள்ளார்.

Read more...

மேட்டூர் அணை திறக்கும் முன் தூர்வாரும் பணி : முதல்வர் கருணாநிதி உறுதி



சென்னை : ""வரும் ஆண்டில் பொதுப்பணித் துறையும், ஊரக வளர்ச்சித் துறையும் இணைந்து, மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பே, தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி முடிக்க வேண்டும்,'' என மேட்டூர் அணையின் பவள விழா நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி பேசினார்.


மேட்டூர் அணை கட்டப்பட்டு, 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில் பவள விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, வீடியோ கான்பரன்சிங் முறையில் முதல்வர் கருணாநிதி வாழ்த்திப் பேசினார். மேலும், பவள விழா கோபுரம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டவும் செய்தார்.


அப்போது முதல்வர் பேசியதாவது: ஆங்கிலேய ஆட்சி, காவிரியில் அணை கட்டுவதற்குரிய இடத்தை ஆய்வு செய்து, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்க நாயக்கர் குறிப்பிட்ட இடமான மேட்டூரை தேர்வு செய்தது. கர்னல் எல்லிஸ் என்ற புகழ்பெற்ற ராணுவப் பொறியாளர், 1910ம் ஆண்டில் அணையை வடிவமைத்து, உரிய மதிப்பீடுகளோடு ஆங்கிலேய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பினார்.அதே காலகட்டத்தில், அன்றைய மைசூரு சமஸ்தானமும், பொறியாளர் விஸ்வேஸ்வரய்யா உதவியுடன் காவிரியில் மைசூரு அருகே கிருஷ்ணராஜசாகர் நீர்த் தேக்கத்தை அமைக்க, ஆங்கில அரசிடம் அனுமதி கோரியது.எனவே, காவிரி நீரை பயன்படுத்துவது தொடர்பாக அப்போதே பிரச்னைகள் எழுந்து, பல்வேறு முயற்சிகளுக்குப் பின் 1924ம் ஆண்டில் சென்னை மாகாண அரசுக்கும், மைசூரு அரசுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. 1924ம் ஆண்டு தான் காவிரிப் பிரச்னை ஆரம்பமானது.


அதே ஆண்டு தான் நானும் பிறந்தேன்.பிறந்தது முதல் இதுவரை அந்தப் பிரச்னைக்காகத் தான் வாதாடிக் கொண்டிருக்கிறேன்; போராடிக் கொண்டிருக்கிறேன். இந்த உடன்படிக்கைக்குப் பின், காவிரியில், மேட்டூர் அணையை கட்ட ஆறு கோடியே 12 லட்சம் ரூபாயை அனுமதித்து, 1925ல் இங்கிலாந்தில் ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடந்தன.பொறியாளர் சர்.கிளமென்ட் முல்லிங்ஸ் தலைமையில் தமிழக பொறியாளர்கள், தொழிலாளர்கள், குறிப்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கல் தச்சுத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் கூடி, மேட்டூர் அணையின் கட்டுமான வேலைகளை 1925 ஜூலை 20ம் தேதி துவங்கி, 1934ம் ஆண்டு ஜூலையில் முடித்தனர்.


ஒன்பது ஆண்டுகளில், 120 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கும் வகையில், 5,300 அடி நீளமும், 171 அடி அகலமும் உடையதாக கட்டி முடிக்கப்பட்ட மேட்டூர் அணையில் இருந்து 1934 ஜூன் 12 அன்று முதன் முதலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகத்தில் உழவுத் தொழிலுக்கு அச்சாணி காவிரி தான். காவிரிக்கு பெருமை சேர்ப்பது மேட்டூர் அணை. இந்த அணைக்கு 75 வயது முடிந்து, பவள விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட போது, இது ஆசியாவிலேயே பெரிய நீர்த்தேக்கம், இன்று தமிழகத்தின் தலையாய நீர்த்தேக்கம்.இந்த அணைக்குக் கீழே வெள்ளக் காலங்களில் கிடைக்கும் கூடுதல் நீரைத் தடுத்து நிறுத்த, கரிகால் சோழன் கட்டிய கல்லணையைத் தவிர வேறு அணை ஏதும் இல்லாத குறையைப் போக்கக் கருதிய இந்த அரசு, கரூர் மாவட்டம் மாயனூர் அருகே கதவணை அமைக்க இந்த ஆண்டு பிப்ரவரியில் 189 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, அதற்குரிய பணிகளை நிறைவேற்றி வருகிறது.


இந்த கதவணை மூலம் தேக்கப்படும் வெள்ள நீர், வறண்ட பகுதிகளுக்கு திருப்பி விடப்படும். மேலும், காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளைச் செப்பனிட மத்திய அரசு 375 கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், மாநில அரசின் பங்காக 93 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தர ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.காவிரிப் பாசன விவசாயிகள் பயன்பெற, தி.மு.க., அரசு அமையும் போதெல்லாம் காவிரியாற்றிலும், கிளை ஆறுகளிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.


வரும் ஆண்டில், சம்பந்தப்பட்ட கலெக்டர்களுடன் ஆலோசித்து, பொதுப்பணித் துறையும், ஊரக வளர்ச்சித் துறையும் இணைந்து, மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பே, தூர்வாரும் பணிகளை நிறைவேற்றி முடிக்க வேண்டுமென, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, தொன்மை வாய்ந்த காவிரி மற்றும் அதன் கிளை நதிகளில் அமைந்துள்ள மதகுகள், அணைகள், கதவணைகள் ஆகியவற்றை சீரமைக்கவும், கரைகளைப் பலப்படுத்தவும், வெள்ளக் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் உதவும் வகையில், தமிழக அரசு 5,100 கோடி ரூபாய் மதிப்பில், ஒரு பெருந்திட்டத்தை தயாரித்து, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.


இந்நிலையில், மேட்டூர் அணையின் பவளவிழா நினைவாக இதன் வலது கரையில் உள்ள குன்றின் மேல் 75 அடி உயரத்தில், பவள விழா கோபுரத் தூண் அமைத்து, மேட்டூருக்குச் சுற்றுலா வரும் பயணிகள் அதன் மேல் ஏறி நின்று மேட்டூர் அணையையும், இயற்கை காட்சிகளையும், மேட்டூர் நகரையும் கண்டு மகிழ வகை செய்யும் திட்டத்தை நிறைவேற்ற, இந்த அரசு ஒரு கோடி ரூபாயை அனுமதித்துள்ளதுடன், அதற்காக இன்று (நேற்று) அடிக்கல் நாட்டியுள்ளது.இவ்வாறு முதல்வர் பேசினார்.

Read more...

பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள்

நாடு முழுவதும் சுமார் 52 விழுக்காடு குழந்தைகள் பாலியல்ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
குறிப்பாக டெல்லி, அஸ்ஸாம், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் அதிகளவு துன்புறுத்தல்கள் நடப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதில் சுமார் 21 விழுக்காடு குழந்தைகள் மிக அதிகளவாகவும், 50 விழுக்காட்டினர் லேசான அளவாகவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வினை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Read more...

பாம்பு கடித்து மாணவர் பலி:



மதுரை மாவட்டம் வயலூரை சேர்ந்தவர் முத்தன் மகன் ரமேஷ். இவர் மதுரை பசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்த இவரை கடந்த 19-ந்தேதி பாம்பு கடித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட ரமேஷ் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று இரவு மாணவர் ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார். சரியான சிகிச்சை அளிக்காததால் தான் மாணவர் இறந்து விட்டார் என்று கூறி கல்லூரி மாணவர்கள் ரமேசின் உடலை ஆஸ்பத்திரி முன்பாக ரோட்டில் போட்டு மறியல் செய்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் தேன்மொழி மற்றும் அதிகாரிகள் நடத்தி பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.

இன்று காலை இறந்த மாணவர் ரமேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அந்த அறை முன்பு கல்லூரி மாணவர்கள், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். பாம்பு கடித்த மாணவருக்கு சரியான சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும், மாணவர் ரமேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி மாணவர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு மறியல் செய்ய முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

தொடர்ந்து மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு மீண்டும் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் தேன்மொழி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்தனர். உடனே போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்த சம்பவம் தொடர் பாக 12 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ஒரு சில மாணவர்கள் அந்த வழி யாக வந்த பஸ்கள் மீது சரமாரியாக கற்களை வீசினர். தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமான போலீசார் ஆஸ்பத்திரி முன்பு குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் எல்லாளன் தலைமையில் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Read more...

கோபன்ஹேகன் மாநாடு குறித்து சில நாடுகள் மீது பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது


கோபன்ஹேகன் காலநிலை மாநாடு சில நாடுகளின் சிறிய குழு ஒன்றால் பணையம் வைத்து நெருக்கடிக்கு தள்ளப்பட்டுவிட்டது என்று பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் கூறியுள்ளார்.

கோபன்ஹேகனில் முக்கிய உடன்பாடு ஏற்படுவதை சீனா தடுத்துவிட்டது என்று அவரது அமைச்சர்களின் ஒருவரான எட் மிலிபாண்ட் குற்றஞ்சாட்டியிருந்தார்.

தனது பங்குக்கு சீனா, புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை வெளியேற்றுவதை அதிகரிக்கச் செய்ய அனுமதித்ததாக அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகளை குற்றஞ்சாட்டியுள்ளது.

நடைமுறைகள் குறித்த விவகாரங்களில் அதிக நேரம் வீணடிக்கப்பட்டதாக கூறுகிறார், இந்த மாநாட்டின் அதிகமான அமர்வுகளுக்கு தலைமை தாங்கிய டென்மார்க் நாட்டின் முன்னாள் காலநிலை அமைச்சரான கொன்னி கெடகார்ட்.

வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் எந்தவொரு நாடும் சரியான கரிசனை காட்டவில்லை என்று தான் ஏமாற்றமடைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.

Read more...

கடன் பிரச்சினை தொடர்பில் துபாய் வேர்லட் நிறுவனம் பேச்சுவார்த்தை


துபாய் அரசாங்கத்துக்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனமான துபாய் வேர்ல்ட் நிறுவனம், தனது 20 பில்லியன் டாலர்கள் பெறுமதியான கடனை மாற்றியமைப்பது குறித்து தனக்கு கடன் வழங்கியவர்களுடன் பேச்சு நடத்துகின்றது.

தனது நிதி நிலைமை குறித்து துபாய் வேர்ல்ட் தனது வங்கிகளுக்கு விபரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தப் பிராந்திய பங்குச் சந்தைகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிகழ்வாக கருதப்படுகின்ற, தனது கடனைத் திருப்பித்தருவதற்கு தாமதமாகும் என்று துபாய் வேர்ல்ட் அறிவித்த நிகழ்வுக்குப் பின்னர் நடக்கின்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்

Read more...

"பாகிஸ்தானின் அதிபர் சில அதிகாரங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்":எதிர்கட்சிகள் கோரிக்கை


பாகிஸ்தானில் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி தனது அதிகாரங்களில் சிலவற்றை விட்டுக் கொடுக்காவிட்டால் அங்கு அவர் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று முக்கிய எதிர்கட்சி எச்சரித்துள்ளது.

அரசியல் ஊழல் குற்றசாட்டுகள் தொடர்பில் அவருக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

ஆனாலும் சட்டவிரோதமான வகையில் ஜர்தாரி அவர்களையோ அல்லது அவரது அரசையோ பதவியிலிருந்து அகற்றும் எந்த நடவடிக்கையையும் தாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம், ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு பொது மன்னிப்பபு வழங்கும் ஒரு ஆணையை சட்டவிரோதமானது என்று அறிவித்தது.

பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அடங்குவர். இதையடுத்து அங்கு அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

Read more...

இரானில் அயதுல்லாவின் உடலடக்கத்தின் போது மோதல்கள்







இரானில் அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த மூத்த மதகுருக்களில் ஒருவரான கிராண்ட் அயதுல்லா ஹொஸைன் மொண்டசாரியின் இறுதி நிகழ்வுகளில், நாட்டின் பாதுகாப்பு படையினருக்கும் எதிர்கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


புனித நகரமான குவாமில் இடம் பெற்ற அவரது நல்லடகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு முக்கிய எதிர்கட்சித் தலைவர்களான மிர் ஹொஸைன் முசவியும், மெஹ்டி கரூபியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவரது நல்லடக்கத்தின் போது, அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த்வர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

மொண்டசாரியின் இறுதி நிகழ்வுகளின் போது பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்வானது எதிகட்சியினரின் போராட்டங்களுக்கு ஒரு உந்துதலை அளித்துள்ளது என்றும், இந்த வாரத்தில் அது மேலும் பரவலாம் என்றும் டெஹ்ரானில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP