ஆஸி.யில் இந்தியர் மீது மீண்டும் தாக்குதல்

>> Wednesday, January 13, 2010

ஆஸ்ட்ரேலியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் இந்தியரை சிட்னி வாழ் இளைஞர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த இந்தியர் பேசுகையில், “நேற்று சிட்னியில் உள்ள கோகீ கடற்கரைக்கு நேற்று சென்றுள்ளார். அங்கு இருந்த இளைஞர் கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியதாக அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்து 40 நிமிடங்களுக்குப் பின்னரே காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்ததாகவும், தன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒருவரை அவர்கள் கைது செய்ததாகவும்” பிடிஐ நிறுவனத்திடம் கூறியுள்ளார். இதற்கிடையில், இந்தியர் மீதான தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP