மீட்பு நடவடிக்கைகள்

>> Wednesday, January 13, 2010

பெரும் சிரமங்களுக்கு இடையில் மீட்புப் பணிகள் நடக்கின்றன
ஹைடியில் பெரிய மீட்பு மற்றும் உதவி நடவடிக்கை ஒன்று தொடங்கப்பட்டுவருகிறது. ஹைட்டியின் தொலைதொடர்பு இணைப்புகளை மீண்டும் நிலைநாட்டவும், சாலைகளில் ஏற்பட்ட தடைகளை நீக்கவும் முயற்சிகள் தொடர்கின்றன.
தலைகர் போர்த்-ஓ-பிரன்ஸ் நகரில் இருக்கும் விமானநிலையம் இப்போது முழுமையாக இயங்கும் நிலைக்கு வந்துவிட்டதாக ஐ.நா கூறியது.
மூவாயிரம் ஐ.நா மன்றப் படைகள் போர்த்-ஓ-பிரன்ஸ் நகரில் விமானநிலையத்தையும் துறைமுகத்தையும் பாதுகாத்துக் கொண்டிருப்பதுடன், வீதிகளிலும் ரோந்து சுற்றி வருவதாகவும் ஐ.நா.மன்ற அமைதிகாக்கும் அதிகாரி ஆலன் லெ ராய் கூறினார்.
சர்வதேச உதவி நிறுவனங்கள் நிதி உதவி கோரியுள்ளன. பன்னாட்டு நாணய நிதியம் தான் உதவ தயாராக உள்ளதாகக் கூறியிருக்கிறது.
போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்களும் இந்த துயர சூழ்நிலையில் அனைவரும் தாராளாமாக உதவக் கோரியுள்ளார்.
பிற நிறுவனங்களும் பல நாடுகளும் தேடி மீட்கும் குழுக்களையும், உயிர் பிழைத்திருப்போருக்கு உதவத் தேவையான பொருட்களையும் அனுப்ப தயாராகிக்கொண்டிருக்கின்றன

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP