பள்ளி வாகனம் மீது ரயில் மோதல்: பாகிஸ்தானில் 8 குழந்தைகள் பலி
>> Wednesday, January 13, 2010
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆளில்லாத ரயில்வே பாதையை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 8 குழந்தைகள் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பஞ்சாப் மாகாணத்தின் மியன் சன்னு பகுதியில் இன்று காலை ஆளில்லாத ரயில்வே பாதையை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதியது. பனி மூட்டம் காரணமாக ரயில் வருவதை வாகன ஓட்டுனர் கவனிக்கவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 8 குழந்தைகள், ஓட்டுனர் என 9 பேர் பலியாகியிருக்கலாம் என்றும், 12 குழந்தைகள் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read more...
