அணு ஆயுத திட்டப் பணிகளை கைவிடும் எண்ணமில்லை: பாகிஸ்தான்
>> Wednesday, January 13, 2010
அணு ஆயுதப் திட்டப் பணிகளை முழுமையாகக் கைவிடும் எண்ணமில்லை எனத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, நாட்டின் பாதுகாப்பிற்காக குறைந்தபட்ச அணு ஆயுதத் திறன் தொழில்நுட்பத்தை தொடர்ந்து பாதுகாப்போம் எனக் கூறியுள்ளது.பாகிஸ்தான் தேசிய சபையில் “பாகிஸ்தானின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் புதிய சட்ட மசோதா இன்று கொண்டு வரப்பட்டது.
அப்போது பேசிய அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பாபர் அவான், “பாகிஸ்தான் மக்கள் கட்சிதான் அணு ஆயுத திட்டப் பணிகளை துவக்கியது. எனவே, அதனை கைவிடுவது அல்லது மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பொறுப்புள்ள இஸ்லாமிய அணு வல்லமை படைத்த நாடு என்ற ரீதியில் குறைந்தளவு அணு ஆயுத தொழில்நுட்பத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம்.
பாகிஸ்தானின் இறையாண்மை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவின் மீது அரசு விவாதம் நடத்த தயாராக உள்ளது” என்றார்.
0 comments:
Post a Comment