பன்னாட்டுப் படையினர் ஆறு பேர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர்

>> Monday, January 11, 2010


ஆப்கானிஸ்தானில் சண்டையிட்டு வரும் சர்வதேச இராணுவப் படையைச் சேர்ந்த ஆறு பேர் அங்கு அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்று நேட்டோ படை தெரிவித்துள்ளது.
பலியானவர்களில் மூவர் அமெரிக்க இராணுவ வீரர்கள். தெற்கு ஆப்கானிஸ்தானில் ஆயுததாரிகளுடன் நடந்த சண்டைகளின்போது இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேபோன்று வடகிழக்கு காபூலில் இடம்பெற்ற ஓர் மோதலில் பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டைகளை முன்னெடுக்க கூடுதல் துருப்புக்களை அனுப்ப நேட்டோ நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையில், பன்னாட்டு படையின் இராணுவ வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP