Showing posts with label விசாரித்தார. Show all posts
Showing posts with label விசாரித்தார. Show all posts

ஜோதிபாசுவிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மன்மோகன் சிங்

>> Thursday, January 7, 2010

நிமோனியா காய்ச்சலாம் அவதிப்பட்டு வரும் மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவை பிரதமர் மன்மோகன் சிங் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மூச்சுத்திணறல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு கடந்த ஜனவரி 1ஆம் தேதி கொல்கட்டாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தததால் உயிர் காக்கும் உபகரணங்களின் பொறுப்பில் ஜோதிபாசு வைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் மதியம் ஒரு மணியளவில் கொல்கட்டா வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் புத்ததேவ் வரவேற்றார். அங்கிருந்து நேரடியாக சால்ட் லேக் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஜோதிபாசுவை சந்தித்தார்.

சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்து ஜோதிபாசுவிடம் நலம் விசாரித்த பிரதமர், பின்னர் உடனடியாக கொல்கட்டா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமருடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் வந்திருந்தார்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP