தாவூத் இப்ராகிமை அபாயகரமான தீவிரவாதியாக அறிவித்தது யு.எஸ்.

>> Friday, January 8, 2010

பிரபல நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமை அபாயகரமான தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில்,பாகிஸ்தான்,இந்தியா மற்றும் அரேபிய நாடுகளில் தாவூத் இப்ராகிமின் நாசவேலை கும்பலைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளதாகவும், தெற்காசியாவில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு தாவூத்தும், அவனது ஆதரவுக் கும்பலும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பில் உள்ளனர்.இந்த கூட்டணி அபாயகரமானது என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் தாவூத் இப்ராகிம் பற்றிய முழுவிபரங்களும் அந்த அறிக்கையில் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP