கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் நீரில் மூழ்கி பலி

>> Friday, January 15, 2010

சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் சென்னையை அடுத்த பெரியபாளையம் அருகே ஆட்டோ கால்வாயில் கவிழ நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னை மாங்காடு அருகே வசிப்பவர் ஆட்டோ ஓட்டுனர் கோவிந்தராஜ், இவருக்கு வயது 35. இவரது மனைவி, மாமியார் மற்றும் இன்னும் சில உறவினர் ஆகியோருடன் சரவணன், வேலு என்ற 8 மற்றும் ஒரு வயது சிறார்களும் அடங்கிய குடும்பத்துடன் பட்லூர் அங்காளம்மன் கோயிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.
அதன் பிறகு அனைவரும் அதே ஆட்டோவில் நேற்று இரவு 8 மணிக்கு பெரியபாளையம் கோவிலுக்குச் சென்றனர். அப்போது கால்வாய் அருகே சென்ற போது ஆட்டோ எதிர்பாராத விதமாக கால்வாயில் கவிழ்ந்தது.இதில் 6 பேரும் பலியானார்கள். காலையில் கால்வாயில் ஆட்டோ மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காவல்துறைக்குத் தகவல் அனுப்பினர்.
தீயணைப்புப் படையினர் ஒரே ஒரு உடலை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. மீதி 5 பேரின் உடல்களையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Read more...

இந்தியரைத் தாக்கிய ஆஸ்ட்ரேலிய நபருக்கு 3 மாதம் சிறை

இந்திய கார் ஓட்டுனர் ஒருவரை நிறவெறி வசை செய்து, தாக்கிய ஆஸ்ட்ரேலிய் நபருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 3 மாதகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.ஆஸ்ட்ரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பல்லார்ட் என்ற இடத்தைச் சேர்ந்த பால் ஜான் பிராக்டன் என்ற ஆஸ்ட்ரேலியர் இந்திய டாக்ஸி டிரைவர் சதீஷ் தடிபமுலா என்பவரின் காரில் பயணம் செய்தார்.ஆனால் நன்றாக குடித்திருந்த பிராக்டன், டிரைவர் தன்னை எங்கோ அழைத்துச் செல்கிறார் என்று தவறாக நினைத்துக் கொண்டு, தகாத வார்த்தைகளால் அவரது பிறப்பையும், இந்தியாவையும் கடுமையாக திட்டிய படியே தக்கியுள்ளார்.இதில் அவரது காரும் சற்றே சேதமடைந்தது. இதனையடுத்து அந்த ஆஸ்ட்ரேலியருக்கு 3 மாத கால சிறை வாசம் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

Read more...

இந்தியரைத் தாக்கிய ஆஸ்ட்ரேலிய நபருக்கு 3 மாதம் சிறை

இந்திய கார் ஓட்டுனர் ஒருவரை நிறவெறி வசை செய்து, தாக்கிய ஆஸ்ட்ரேலிய் நபருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 3 மாதகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.ஆஸ்ட்ரேலியாவின் விக்டோரியாவில் உள்ள பல்லார்ட் என்ற இடத்தைச் சேர்ந்த பால் ஜான் பிராக்டன் என்ற ஆஸ்ட்ரேலியர் இந்திய டாக்ஸி டிரைவர் சதீஷ் தடிபமுலா என்பவரின் காரில் பயணம் செய்தார்.ஆனால் நன்றாக குடித்திருந்த பிராக்டன், டிரைவர் தன்னை எங்கோ அழைத்துச் செல்கிறார் என்று தவறாக நினைத்துக் கொண்டு, தகாத வார்த்தைகளால் அவரது பிறப்பையும், இந்தியாவையும் கடுமையாக திட்டிய படியே தக்கியுள்ளார்.இதில் அவரது காரும் சற்றே சேதமடைந்தது. இதனையடுத்து அந்த ஆஸ்ட்ரேலியருக்கு 3 மாத கால சிறை வாசம் தண்டனையாக விதிக்கப்பட்டுள்ளது.

Read more...

கன்னியாகுமரியில் நன்றாகத் தெரியும் கங்கன கிரகணம்


இந்த நூற்றாண்டின் அதிசய நீண்ட நேர சூரிய கிரகணத்தைக் காண கன்னியாகுமரியிலும் ராமேஸ்வரத்திலும் ஆயிரக்கணக்கானோர் கூடியுள்ள நிலையில் அங்கு கங்கணம் போட்ட சூரிய கிரகணம் அற்புதமாக தெரிந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 108 ஆண்டுகள் கழித்து தமிழகத்தில் இந்த கிரகணம் தெரிவிதால் பொது மக்கள் இதன் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.வானில் கண் போன்று தெரிந்த அந்த கங்கண கிரகண வடிவத்தை மக்கள் கண்டு உற்சாகமடைந்தனர்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரட்னூ, பொதுப்பணித் துறை விருந்தினர் மாளிகளியில் சிறப்பு தொலைக்காட்சிப் பெட்டிகளை அமைத்து இதனைக்காண சிறப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதாக தெரிவித்தார். பிளாஸ்மா தொலைக்காட்சிப் பெட்டியுடன் நுண்ணோக்கி ஒன்று இணைக்கப்பட்டதனால் கங்கண வடிவம் அபாரமாக தெரிந்தது என்று அதைக்கண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

25 மாநிலங்களிலிருந்து சுமார் 750 மாணவர்கள் இதனைக் காண வந்துள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.மிஜோரம் மாநிலத்தில் 3.15 மணிக்கு கிரகணம் விடுகிறது.

Read more...

இந்திய விளையாட்டுப் பொருட்களில் நச்சு இரசாயனங்கள்


இந்தியாவில் விற்கப்படுகின்ற பல பிளாஸ்டிக் விளையாட்டு சாமான்களில், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்பை உண்டாக்கக்கூடிய நச்சு இரசாயனங்கள் உள்ளன என்று இந்தியாவின் முன்னணி சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு கூறியுள்ளது.
பிளாஸ்டிக்கை மென்மையாக்க உதவும் ப்தாலேட்ஸ் எனப்படும் நச்சு இரசாயனம் விளையாட்டு சாமான்கள் உற்பத்தித் துறையினரால் பயன்படுத்தப்படுவது தொடர்பில் இந்தியாவில் எவ்வித ஒழுங்கு விதியும் இல்லை என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறுகிறது.
இந்தியாவில் விற்கப்பபடும் பலவித விளையாட்டுப் பொருட்களையும் ஆராய்ந்த இந்தக் குழு, அவற்றில் அதிக அளவில் தாலேட்ஸ் இரசாயனம் இருப்பதாக கண்டறிந்துள்ளது.
கிட்டத்தட்ட பாதியளவிலான விளையாட்டுப் பொருட்களில், சர்வதேச ரீதியில் அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான இரசாயனம் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

Read more...

இரானிய போராட்டங்களுக்கு குறுந்தகவல்களைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை


செல்லிடத் தொலைபேசி குறுந்தகவல் சேவையையும் மின் அஞ்சல் சேவையையும் பயன்படுத்தி இரானின் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு எதிராக இரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் போன்றவை கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், அவற்றை அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்க எடுக்கப்படும் எனவும் இரானின் காவல்துறை தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் திட்டங்களை பரப்புவதென்பது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயல் என்று அவர் கூறினார்.
இரானில் சென்ற வருடம் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செய்திருந்த போராட்டங்களின் எதிரொலியாக சீர்திருத்த ஆதரவு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களை அரசாங்கம் மூடியிருந்தது. செல்லிட தொலைபேசி குறுந்தகவல் சேவைகளையும் அரசாங்கம் நிறுத்திவைத்திருந்தது.

Read more...

இரானிய போராட்டங்களுக்கு குறுந்தகவல்களைப் பயன்படுத்துவது குறித்து எச்சரிக்கை

செல்லிடத் தொலைபேசி குறுந்தகவல் சேவையையும் மின் அஞ்சல் சேவையையும் பயன்படுத்தி இரானின் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு எதிராக இரான் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் போன்றவை கண்காணிக்கப்பட்டுவருவதாகவும், அவற்றை அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு பயன்படுத்துபவர்கள் மீது சட்ட நடவடிக்க எடுக்கப்படும் எனவும் இரானின் காவல்துறை தலைமை அதிகாரி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் திட்டங்களை பரப்புவதென்பது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயல் என்று அவர் கூறினார்.
இரானில் சென்ற வருடம் நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் செய்திருந்த போராட்டங்களின் எதிரொலியாக சீர்திருத்த ஆதரவு செய்தித்தாள்கள் மற்றும் இணையதளங்களை அரசாங்கம் மூடியிருந்தது. செல்லிட தொலைபேசி குறுந்தகவல் சேவைகளையும் அரசாங்கம் நிறுத்திவைத்திருந்தது.

Read more...

நீண்ட சூரிய கிரகணம்




ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய வருடாந்த நீண்ட சூரிய கிரகணத்தை இன்று ஆப்ரிக்க மற்றும் ஆசிய பிராந்திய நாடுகளில் காணக்கூடியதாக இருந்தது.
இதன்போது சூரியனின் மையப்பகுதியை சந்திரன் மறைத்ததன் விளைவாக, சூரியனின் வெளிவட்டமானது வைர மோதிரம் போல் ஜொலித்தது.
இந்தச் சூரிய கிரகணம் மத்திய ஆப்ரிக்க பகுதியில் முதலில் தெரிய ஆரம்பித்தது. பிறகு படிப்படியாக இந்தக் கிரகணம் கிழக்கு ஆப்ரிக்கா, தெற்காசியா மற்றும் சீனா என்று நகர்ந்து, கடைசியாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிகபட்சமாக 11 நிமிடம் அது நீடித்து காணப்பட்டது.
இத்தகையதொரு வருடாந்த சூரியகிரகணம் 3043 ஆம் ஆண்டு வரை மீண்டும் காண முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்.

Read more...

ஹெய்ட்டிக்கு உதவிகளை அனுப்புவதில் சிரமம்


பெரும் பூகம்பம் ஏற்பட்ட ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோருக்கு அவசர உதவிப் பொருட்களைக் கொண்டு சேர்க்க தாங்கள் போராடிவருவதை சர்வதேச தொண்டு நிறுவனங்கள் ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தினால் ஏற்பட்டுள்ள கடுமையான அழிவுகள் நிவாரணப் பொருட்களையும் கருவிகளையும் கொண்டு சேர்ப்பதென்பதை மிகவும் சிரமமாக்கியுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது.
இருபது லட்சம் பேர் வரையிலானவர்களுக்கு உணவு உதவி வழங்க ஐ.நா. எண்ணம் கொண்டுள்ளது என்றாலும் தற்போது வெறும் நான்காயிரம் பேரை மட்டுமே அதனால் சென்றடைய முடிந்துள்ளது.
அமெரிக்காவின் விமானந்தாங்கிக் கப்பலான கார்ல் வின்சன் ஹெட்டியை சென்றடைந்துள்ளது.
அதிலிருந்த ஹெலிகாப்டர்கள் தலைநகருக்கு உணவுப் பொருட்களின் விநியோகத்தை ஆரம்பித்துள்ளன.

Read more...

நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் இன்று

>> Thursday, January 14, 2010

இன்று காலை 11.57 மணிக்குத் துவங்கி மாலை 3.08 மணி வரை நீடிக்கும் இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரியகிரகணம் முதல் மத்திய ஆப்பிரிக்காவில் 10.44 மணிக்கு துவங்குகிறது.

மத்திய ஆப்பிரிகாவில் துவங்கி சீனாவின் மஞ்சள் கடலில் முடிவடைகிறது. இந்த அதிசய சூரிய கிரகணத்தை ராமேஸ்நரத்தில் உள்ள தனுஷ்கோடியிலிருந்து ஓரளவிற்கு தெளிவாகக் காண முடியும் என்று கூறப்படுகிறது.

மிகவும் சக்தி வாய்ந்த நீண்ட நேர கிரகணம் என்பதால் கிரகணத்தின் போது சூரியனை வெறும் கண்ணால் பார்ப்பது கண்களுக்கு தீமை விளைவிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே அதற்குரிய கண்ணாடி அணிந்தே பார்க்க வேண்டும். இந்த சூரிய கிரகணத்தின் ஆரம்ப நிலைகளை கன்யாகுமரியில் காணலாம், அதன் பிறாகு ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பிறகு கேரளா ஆகிய இடங்களில் காணலாம்.

இறுதியில் வடகிழக்கு மாநிலமான மிஜோரமில் கடைசியாக இறுடித் தருணங்களில் காணலாம்.

மதியம் 1.39 மணிக்கு 50% சதத்திற்கும் மேலாக மறைந்துவிட்ட சூரிய கிரகணத்தைப் பார்க்கலாம்.

இந்த வானியல் அதிசயத்தைக் காண 950 பேர் கொண்ட படகு மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளது. மாலத்தீவுகளில் நண்பகல் 12.20 மணிக்கு சூரிய கிரகணம் உச்சத்தில் இருக்கும்போது 90% சூரியன் மறைந்திருக்கும் இந்த அரிய காட்சியைக் காணவே படகில் சென்றுள்ளனர்.

நெருப்பு வளைய சூரியகிரகணம் எனப்படும் இது யாதெனின், சூரியனுக்கு நேர் கோட்டில் சந்திரன் வரும் ஆனால் சூரியனின் அளவைக்காட்டிலும் சந்திரன் சிறியது என்பதால் சூரியனின் மேற்புற ஆரம் மட்டும் வெளிச்சமாகத் தெரியும் இதனால் இது நெருப்பு வளைய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

கடைசியாக இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் 1965ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி நிகழ்ந்தது. மீண்டும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம்தான் இதனைக் காணமுடியும்.

இதற்கு அடுத்தபடியாக இந்த நெருப்பு வளைய சூரியகிரகணம் 3043ஆம் ஆண்டுதான் நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Read more...

ஹைட்டி பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுகளில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களையும் கடந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் இடிபாடுகளில் எவ்வள்வு பேர் உயிருடன் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

சேதமும், உயிர்ழப்பும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவில் உள்ளதால் ஏழை நாடான ஹைட்டியிற்கு ஐ.நா. ரூ. 500 கோடி நிவாரணம் அளித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குவியல் குவியலாக பிணங்கள் சாலைகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன.

ரிக்டர் அளவு கோலில் 7.3 என்று பதிவான இந்த நில நடுக்கத்தில் நாடாளுமன்ற கட்டிடம் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிடங்கள் தரைமட்டமாயின. பூகம்பத்தில் சிக்கிய இந்தியர்களின் நிலவரம் என்னவென்று தெரியவில்லை.

பல நாடுகளிலிருந்தும் மீட்புப் பணிகளும், உதவிகளும் ஹைட்டி நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றன.

Read more...

குண்டுத் தாக்குதல்கள்: 11 பேருக்கு பாக்தாத் நீதிமன்றம் மரண தண்டனை


இராக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட பல்வேறு வாகன குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் இருத்து அவற்றை திட்டமிட்டு நடத்திய குற்றங்களின் அடிப்படையில் இராக்கியர்கள் 11 பேருக்கு மரண தண்டனை விதித்து பாக்தாத்தில் இருக்கும் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.

இவர்கள் நடத்தியதாக கூறப்படும் குண்டு தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.

வெளிநாட்டவர் மற்றும் நிதியமைச்சகத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் மிகத் தீவிரமானவையாக இருந்தன என்பதோடு ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக நீடித்தன.

தண்டிக்கப்பட்டவர்களில் சிலர் இராக்கின் அல்கயீதா அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும், மற்றவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் தூக்கிலிடப்பட்ட இராக்கிய அதிபர் சதாம் ஹுசைனின் பாத் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுமார் ஒன்றரை மணித்தியாலம் நடந்த நீதிமன்ற நடைமுறைகளின் முடிவில் இந்த தீர்ப்பும் தண்டனையும் அறிவிக்கப்பட்டன.

இதன்போது குற்றம் சாட்டப்பட்டவர்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் அங்கே இருந்தார்களா இல்லையா என்பது சரியாக தெரியவில்லை.

Read more...

அமெரிக்க தாக்குதலிலிருந்து தாலிபான் தலைவர் 'தப்பினார்'


அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் ஹகிமுல்லா மெசூத் தப்பி விட்டதாக பாகிஸ்தானிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் குறைந்தது தீவிரவாத சந்தேக நபர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானை ஒட்டிய பாகிஸ்தானின் பழங்குடியினர் பிரதேசமான வடக்கு வசிரிஸ்தானில் இருக்கும் பயிற்சி முகாம் என்று கூறப்படும் இடத்தின் மீது இந்த ஏவுகணை தாக்குதல் குறிவைத்து நடத்தப்பட்டது.

தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்னதாக தாக்கப்பட்ட இடத்திலிருந்து தங்கள் தலைவர் வேறு இடத்திற்கு சென்றதாகவும், அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் பாகிஸ்தான் தாலிபன் அமைப்பின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்திருக்கிறார்.

Read more...

நிதி நெருக்கடியிலிருந்து வங்கிகளைக் காப்பாற்ற வழங்கப்பட்ட அரசு நிதியைத் திரும்பக் கேட்க அமெரிக்க அதிபர் ஒபாமா திட்டம்


நிதி நிறுவனங்களை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற அரசுக்கு ஏற்பட்ட செலவின் பெரும் பகுதியை வங்கிகளிடம் இருந்து பெரும் திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா விரைவில் அறிவிக்கவுள்ளார்.

இது பற்றிய விபரங்கள் சில ஏற்கனவே வெளிவந்துள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கம் 117 பில்லியன் டாலர்கள் கட்டம் கட்டமாக பல வருட காலத்தில் திரும்பப் பெருவது என ஒரு அதிகாரி கூறியுள்ளார்.

50 பில்லியன் டாலர்களுக்கு மேலான உடைமை வைத்துள்ள வங்கிகள் தமது வரவு செலவு அறிக்கையைப் பொறுத்து தீர்வு ஒன்றை கட்ட வேண்டும்.

அமெரிக்க அரசிடம் நிதி உதவியை திரும்ப கட்டி நிறுவனங்களுக்கும், நிதி உதவியைப் பெறாத நிறுவனங்களுக்கும் கூட இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டாது.

Read more...

பல்லாயிரம் பேர் பூகம்பத்தில் பலியாகியுள்ள ஹைடியில் மீட்புப் பணிகளில் அமெரிக்கா உதவி


ஹைடியில் செவ்வாய்கிழமையன்று ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்படும் சர்வதேச மீட்பு நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அமெரிக்கா அந்நாட்டுக்கு பெருமளவில் படையினரை அனுப்புகிறது.

மூவாயிரத்து ஐநூறு வான் படையினரை அந்நாடு அனுப்புகிறது. இதில் முதல் நூறு பேர் வியாழனன்று ஹைடி செல்கின்றனர்.

இது தவிர விமானம் தாங்கி கப்பல் ஒன்றையும் மேலும் மூன்று கப்பல்களையும் அமெரிக்கா அனுப்புகிறது.

பிற நாடுகளின் மீட்புக் குழுக்கள் - சிறப்பு இயந்திரங்களுடன் ஹைடியின் தலைநகர் போர்த பிரான்சுக்கு வான் மூலம் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இவை போதுமானதாக இல்லை என்று அங்கிருக்கும் பிபிசி நிருபர் ஒருவர் உள்ளனர்.

போர்த்-ஓ-பிரன்ஸ் நகருக்குள் சென்றுவருவது எளிதாக இல்லை என்று கூறியுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் தொலைதொடர்பு வசதிகள் இயங்குவதாகவும், ஆனால் காயமடைந்தவர்களால் மருத்துவமனைகள் நிறைந்திருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

இந்த பூகம்பத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல்லாயிரமாக இருக்கலாம் என்று சிலரும் சில லட்சங்களாக இருக்கலாம் என்றும் ஊகங்கள் நிலவுகின்றன.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தற்போது கவனம் செலுத்தப்படுகிறது.

Read more...

ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பம்: சீனா பரிசோதனை வெற்றி

>> Wednesday, January 13, 2010

எதிரி நாட்டில் இருந்து வரும் ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் நவீன தொழில்நுட்பத்தை சீனா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஷின்ஹுவா (Xinhua) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “தனது எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஊடுருவும் ஏவுகணையை, மற்றொரு ஏவுகணை மூலம் தரையில் இருந்து சென்று தாக்கி அழிக்கும் தொழில்நுட்பத்தை பரிசோதித்துள்ளது. இந்தப் பரிசோதனையின் முடிவு திட்டமிட்டபடி வெற்றிகரமாக அமைந்ததாக” கூறப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனை எந்த நாட்டையும் குறிவைத்து நடத்தப்படவில்லை என்றும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
தைவான் தனது நாட்டின் அங்கம் எனக் கூறி வரும் சீனா, அதனை எப்போது வேண்டுமானாலும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், பேட்ரியாட் (Patriot) ரக ஏவுகணைகளை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்க நாடாளுமன்றம் கடந்த ஓராண்டுக்கு முன் அளித்த அனுமதியை தற்போது பென்டகன் உறுதி செய்தது. இதனால் தைவான் நாட்டிற்கு பேட்ரியாட் ரக ஏவுகணைகளை அமெரிக்கா எந்தவித தடையுமின்றி விற்பனை செய்ய முடியும். இந்தத் தகவல் வெளியான ஒரு சில மணி நேரத்தில் சீனா ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Read more...

ஆஸி.யில் இந்தியர் மீது மீண்டும் தாக்குதல்

ஆஸ்ட்ரேலியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வரும் இந்தியரை சிட்னி வாழ் இளைஞர்கள் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த இந்தியர் பேசுகையில், “நேற்று சிட்னியில் உள்ள கோகீ கடற்கரைக்கு நேற்று சென்றுள்ளார். அங்கு இருந்த இளைஞர் கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியதாக அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் நிகழ்ந்து 40 நிமிடங்களுக்குப் பின்னரே காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்ததாகவும், தன் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒருவரை அவர்கள் கைது செய்ததாகவும்” பிடிஐ நிறுவனத்திடம் கூறியுள்ளார். இதற்கிடையில், இந்தியர் மீதான தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை

Read more...

அணு ஆயுத திட்டப் பணிகளை கைவிடும் எண்ணமில்லை: பாகிஸ்தான்

அணு ஆயுதப் திட்டப் பணிகளை முழுமையாகக் கைவிடும் எண்ணமில்லை எனத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அரசு, நாட்டின் பாதுகாப்பிற்காக குறைந்தபட்ச அணு ஆயுதத் திறன் தொழில்நுட்பத்தை தொடர்ந்து பாதுகாப்போம் எனக் கூறியுள்ளது.பாகிஸ்தான் தேசிய சபையில் “பாகிஸ்தானின் பாதுகாப்பு” என்ற தலைப்பில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில் புதிய சட்ட மசோதா இன்று கொண்டு வரப்பட்டது.
அப்போது பேசிய அந்நாட்டு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பாபர் அவான், “பாகிஸ்தான் மக்கள் கட்சிதான் அணு ஆயுத திட்டப் பணிகளை துவக்கியது. எனவே, அதனை கைவிடுவது அல்லது மூடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. பொறுப்புள்ள இஸ்லாமிய அணு வல்லமை படைத்த நாடு என்ற ரீதியில் குறைந்தளவு அணு ஆயுத தொழில்நுட்பத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வோம்.
பாகிஸ்தானின் இறையாண்மை பாதுகாக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவின் மீது அரசு விவாதம் நடத்த தயாராக உள்ளது” என்றார்.

Read more...

பள்ளி வாகனம் மீது ரயில் மோதல்: பாகிஸ்தானில் 8 குழந்தைகள் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஆளில்லாத ரயில்வே பாதையை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்தில் 8 குழந்தைகள் பலியானதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.பஞ்சாப் மாகாணத்தின் மியன் சன்னு பகுதியில் இன்று காலை ஆளில்லாத ரயில்வே பாதையை கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது பயணிகள் ரயில் மோதியது. பனி மூட்டம் காரணமாக ரயில் வருவதை வாகன ஓட்டுனர் கவனிக்கவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த 8 குழந்தைகள், ஓட்டுனர் என 9 பேர் பலியாகியிருக்கலாம் என்றும், 12 குழந்தைகள் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more...

சீனாவுக்கான இணைய தணிக்கை நிறுத்தப்படுகிறது: கூகுள்


சீனாவில் சில இணைய தளங்களை தணிக்கை செய்யும் தனது கொள்கையை நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படி செய்வதன் மூலம், கூகுள் சீனாவில் இருந்து வெளியேற நேரிடலாம்.
கூகுள் அளிக்கும் இணைய சேவையின் சில வசதிகளை பயன்படுத்தி சீன அரசு தனது அதிருப்தியாளர்களைப் பற்றி தகவல் பெற முயற்சி செய்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை என்று கூகுள் கூறியுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து, பீஜிங்கில் உள்ள கூகுள் அலுவலகத்துக்கு சீன குடிமக்கள் குழு ஒன்று மலர் கொத்துக்களுடன் வந்து வாழ்த்து தெரிவித்துள்ளது. அதேநேரம் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களும் வந்துள்ளன.
கூகுள் அவ நம்பிக்கையுடனும் முட்டாள்தனமாகவும் செயல்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக கூகுளிடம் கூடுதல் விபரங்கள் கோரியுள்ளதாக சீன அரசு கூறியுள்ளது.

Read more...

ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் 2009ஆம் ஆண்டே மிக அதிக உயிரிழப்பு: ஐ.நா. அறிக்கை


ஆப்கானிஸ்தானில் 2001ஆம் ஆண்டு போர் துவங்கியதில் இருந்து மிக அதிக அளவிலான பொதுமக்கள் கடந்த ஆண்டில்தான் உயிரிழந்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2400 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெரும்பான்மையானவர்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தாலிபான்கள் என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கா தலைமையிலான நோட்டோ நேசப்படையினரால் ஏற்படும் இழப்புகள் முன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. இருந்தும் 2009ஆம் ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 14 சதவீதம் உயர்ந்துள்ளது

Read more...

மீட்பு நடவடிக்கைகள்

பெரும் சிரமங்களுக்கு இடையில் மீட்புப் பணிகள் நடக்கின்றன
ஹைடியில் பெரிய மீட்பு மற்றும் உதவி நடவடிக்கை ஒன்று தொடங்கப்பட்டுவருகிறது. ஹைட்டியின் தொலைதொடர்பு இணைப்புகளை மீண்டும் நிலைநாட்டவும், சாலைகளில் ஏற்பட்ட தடைகளை நீக்கவும் முயற்சிகள் தொடர்கின்றன.
தலைகர் போர்த்-ஓ-பிரன்ஸ் நகரில் இருக்கும் விமானநிலையம் இப்போது முழுமையாக இயங்கும் நிலைக்கு வந்துவிட்டதாக ஐ.நா கூறியது.
மூவாயிரம் ஐ.நா மன்றப் படைகள் போர்த்-ஓ-பிரன்ஸ் நகரில் விமானநிலையத்தையும் துறைமுகத்தையும் பாதுகாத்துக் கொண்டிருப்பதுடன், வீதிகளிலும் ரோந்து சுற்றி வருவதாகவும் ஐ.நா.மன்ற அமைதிகாக்கும் அதிகாரி ஆலன் லெ ராய் கூறினார்.
சர்வதேச உதவி நிறுவனங்கள் நிதி உதவி கோரியுள்ளன. பன்னாட்டு நாணய நிதியம் தான் உதவ தயாராக உள்ளதாகக் கூறியிருக்கிறது.
போப்பாண்டவர் பெனடிக்ட் அவர்களும் இந்த துயர சூழ்நிலையில் அனைவரும் தாராளாமாக உதவக் கோரியுள்ளார்.
பிற நிறுவனங்களும் பல நாடுகளும் தேடி மீட்கும் குழுக்களையும், உயிர் பிழைத்திருப்போருக்கு உதவத் தேவையான பொருட்களையும் அனுப்ப தயாராகிக்கொண்டிருக்கின்றன

Read more...

ஐ.நா. அமைதிப் படையினர் உயிரிழப்பு



ஹைடியில் நடந்த நிலநடுக்கத்தில் ஐநாவுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
போர்த்-ஓ-பிரன்ஸ் நகரில் உள்ள அதன் தலைமையகம் முற்றாக இடிந்து போய்விட்டது. அங்கு பணியாற்றிய தலைமை அதிகாரியான ஹேடி அன்னாபியும், அவரோடு உடன் பணியாற்றிய பலரும் என்ன ஆனார்கள் என்பது குறித்து தெரியவில்லை.
பிரேசிலும், ஜோர்டானும் அங்கு பணியில் இருந்து தமது நாட்டு படையினர் உயிர் இழந்ததாக தெரிவித்துள்ளன. தமது நாட்டை சேர்ந்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளதாக சீனா கூறியுள்ளது.
பாக்தாத்தில் தனது கட்டிடத்தில் 2003 ஆம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்புக்குப் பிறகு இதுதான் ஐ.நா. சந்திக்கும் பெரிய சவால் என்று ஐ.நா. அதிகாரி ஒருவர் நியூயார்க் நகரில் தெரிவித்துள்ளார்.

Read more...

ஹைடி பூகம்பம்: பெரும் சேதம், ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது


ஹைடியை செவ்வாயன்று தாக்கிய பெரும் பூகம்பம் மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோர் இதில் கொல்லப்பட்டுள்ளதாகக் அஞ்சப்படுகிறது.
வீதிகளில் உடல்கள் இறைந்து கிடப்பதையும், கட்டிடங்கள் கூளங்களாகி நொறுங்கிக் கிடப்பதையும் ஹைடி தலைநகர் போர்த்-ஓ-பிரன்ஸிலிருந்து வரும் தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.
கட்டிட இடிபாடுகளிலிருந்து மக்கள் உதவி கேட்டு குரல் எழுப்புவதாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். ஆனால் சிக்கியுள்ளவர்களை மீட்க பெரிய அளவிலான பணி ஏதும் நடந்துவருவதற்கான அறிகுறி எதனையும் அவர்கள் கண்டிருக்கவில்லை.
ஐம்பதாயிரம் ஜனத்தொகை கொண்ட ஹைடியின் ஜக்மெல் என்ற ஊரிலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஜக்மேல் நகரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அங்குள்ள ஐ.நா. குழந்தைகள் நிதியமான யூனிசெஃப்பின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்

Read more...

அல் - காய்தாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஏமன் அறிவிப்பு

>> Monday, January 11, 2010

பயங்கரவாதத்தை கைவிட்டு விட்டு ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வரும் அல் - காய்தா தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலேக் அறிவித்துள்ளார். அல் - காய்தா தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏமனை அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அலி அப்துல்லா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அல் - காய்தா சவால்களை சமாளிக்க தமது அரசாங்கம் உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும், வன்முறையை கைவிட மறுக்கும் அல் - காய்தாவினரை ராணுவத்தினர் ஒடுக்குவார்கள் என்றும் அலி அப்துல்லா மேலும் தெரிவித்துள்ளார் .

Read more...

மேக்கப் போட்ட கற்கால மனிதன்

'நியாண்டர்தால்' என்றழைக்கப்படும் 50,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதன், தன்னை அழகுப்படுத்திக் கொள்ள மேக்கப் போட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கற்கால மனிதன் பார்ப்பதற்கு மிகவும் அசிங்கமாக இருப்பதாகத்தான் நாம் இதுநாள் வரை கற்பனை செய்து வைத்திருந்தோம். ஆனால் அந்த எண்ணத்தை தற்போது நாம் தாராளமாக மாற்றிக்கொள்ளலாம்.இது தொடர்பாக லண்டனிலிருந்து வெளியாகும் 'டெய்லி மெயில்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: வர்ணம் பூசிக் கொள்வதற்காக கற்கால மனிதன் சிப்பிகளை பயன்படுத்தியுள்ளான். தெற்கு ஸ்பெயினில் தொல்லியல் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சிப்பிகளில் வண்ணக்கலவை ஒட்டியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இது குறித்து இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் ஜோவாவோ ஜில்ஹாவோ கூறுகையில், "இதற்கு முன்னர் ஆப்பிரிக்காவில், கறுப்பு மாங்கனீஸ் குச்சிகளை வர்ணம் பூச பயன்படுத்தியது கடைசியாக கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மேக்கப் பொருள்கள் சற்று வித்தியாசமானது.மஞ்சள் நிறக் கலவை மேற்பூச்சாக முதலில் பூசப்பட்டுள்ளன.பின்னர் சிவப்பு பொடியில் பளபளக்கும் கறுப்பு தாதுவை கலந்து பயன்படுத்தியுள்ளனர்.பிரகாசமான வண்ணம் பூசப்பட்டு அழகுப்படுத்தப்பட்ட சிப்பிகள் அணிகலன்களாக அணிந்துள்ளனர். இது 10,000 வருடங்களுக்கு முந்தையது" என்றார்.

Read more...

2 ஆம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப்போரின் போது மூழ்கடிக்கப்பட்ட ஆஸ்ட்ரேலிய மருத்துவக் கப்பல் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது 1943 ஆம் ஆண்டு மே மாதத்தில், 'தி சென்டார்' என்ற ஆஸ்ட்ரேலிய மருத்துவ கப்பலை, ஜப்பான் தாக்கி மூழ்கடித்தது. அந்த கப்பலில் பயணம் செய்த 332 பேர்களில், 64 பேர் மட்டுமே உயிர் தப்பினர்.இந்நிலையில் இந்த கப்பலை தேடும் பணியில் ஈடுபட்ட குழு, அதனை தற்போது கண்டுபிடித்துள்ளது. கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி மோர்தான் தீவிற்கு சுமார் 30 மைல்கள் தொலைவில், குயின்ஸ்லேண்ட் என்னுமிடத்தில் இக்கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. கடலுக்கு அடியில் சுமார் 2 கி.மீ ஆழத்தில் இருந்த சிறப்பு காமிரா, இதனை படம் பிடித்துள்ளது.இதன் மூலம் 66 ஆண்டுகளாக விடை தெரியாமல் இருந்த கேள்விகளுக்கு, விரைவில் பதில் கிடைக்கும் என்று தாம் நம்புவதாக அந்த ஆய்வுக் குழுவின் இயக்குனர் டேவிட் மியர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

காஸா மீது இஸ்ரேல் விமான தாக்குதல்

காஸா நகரின் மத்தியப் பகுதியில் இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதலில் 3 தீவிரவாதிகள் பலியாயினர். மத்திய காஸா பகுதியில் பதுங்கியிருந்தபடி இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேலுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் விமானப் படை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.இதில் 3 தீவிரவாதிகள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Read more...

இந்தியர்கள் பாதுகாப்பு ஆஸி. அரசின் பொறுப்பு - வயலார் ரவி

ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களின் பாதுகாப்பே அந்நாட்டு அரசின் கடமைகளில் முன்னுரிமையான ஒன்று என்று வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி குறிப்பிட்டுள்ளார்.இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் ஆஸ்திரேலியா மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.இந்தியர்களைப் பாதுகாக்க ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து இந்திய அரசுக்கு ஆஸ்திரேலியே தெளிவுபடுத்த வேண்டும் என்றும் புதுடெல்லியில் பி.டி.ஐக்கு அவர் அளித்த பேட்டியில் கேட்டுக் கொண்டுள்ளார்.அங்கு வாழும் இந்தியர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் ஆஸ்திரேலியா எடுக்க வேண்டியது அவசியம் என்றார் அவர்.அண்மைக்காலமாக ஆஸ்திரேலியாவில் இந்தியார்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது கவலையளிக்கக்கூடியது என்றும், ஒவ்வொரு இந்தியரின் உயிரும் விலைமதிப்பில்லாதது என்றும் வயலார் ரவி கூறினார்.

Read more...

40,000 இந்தியர்களை காணவில்லை: மலேசியா

மலேசியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்த சுமார் 40,000 இந்தியர்களை காணவில்லை என்று அந்நாட்டு பிரதமர் நஜிப் டன் ரஸாக் தெரிவித்துள்ளார். ஏறக்குறைய 39,046 இந்தியர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் இங்குள்ளவர்களுடனேயே ( மலேசியாவில் ) தங்கியிருக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு திரும்பியிருக்க வேண்டும்.அரசு ஆவணங்களின்படி அவர்கள் காணாமல் போயுள்ளனர்.இந்த பிரச்னையை விரைவில் மேற்கொள்ள உள்ள எனது இந்திய பயணத்தின்போது இந்திய அரசிடம் எழுப்புவேன். இந்தியர்கள் சுற்றுலாப் பயணிகளாக மலேசியாவுக்கு வருவதை நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் தாராளமாக நடந்துகொள்ள விரும்புகிறோம்.அதே நேரத்தில் அவர்கள் உண்மையான சுற்றுலாப் பயணிகளாக இருக்க வேண்டும் என்று மலேசியா வந்த இந்திய ஊடகவியலாளர்களிடையே உரையாற்றிய பிரதமர் நஜிப் மேலும் தெரிவித்தார்.

Read more...

அஸ்திரா ஏவுகணை வெற்றிகர சோதனை

ஆகாயத்தில் இருந்தபடியே எதிரியின் விமான இலக்கினை சென்று தாக்கவல்ல அஸ்திரா ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தது.ஒரிசா மாநிலம் சந்திப்பூர் கடற்பகுதியில் அமைந்துள்ள பாலசூர் ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனை தளத்தில் இருந்து இன்று காலை 9.45 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அந்த தளத்தின் இயக்குனர் எஸ்.பி. டாஷ் தெரிவித்துள்ளார்.இந்த சோதனை வெற்றி பெற்றதாகவும் அவர் கூறினார்.இன்று பிற்பகல்வாக்கில் இதே பகுதியில் இருந்து மீண்டும் ஒரு அஸ்திரா ஏவுகணை சோதிக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த ஏவுகணையானது நேருக்கு நேர் வரும் விமானங்களை 80 கி.மீ தூரத்திலும், முன்னே செல்லும் விமானங்களை 20 கி.மீ தூரத்திலும் கண்டறியும் திறன் கொண்டது.

Read more...

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்க திட்டம்

உலகம் வெப்பமயமாவதைத் தடுக்கும் முயற்சியாக சூரிய ஒளியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று அறிவித்தார்.நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இத்திட்டத்தின் மூலம் பதிமூன்றாவது ஐந்தாண்டு திட்ட காலமான 2018-2022ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.இது சுலபமாக அடையக்கூடிய ஒரு இலக்கு எனவும், இதை அடைவது நம் அனைவரின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more...

பன்னாட்டுப் படையினர் ஆறு பேர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர்


ஆப்கானிஸ்தானில் சண்டையிட்டு வரும் சர்வதேச இராணுவப் படையைச் சேர்ந்த ஆறு பேர் அங்கு அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்று நேட்டோ படை தெரிவித்துள்ளது.
பலியானவர்களில் மூவர் அமெரிக்க இராணுவ வீரர்கள். தெற்கு ஆப்கானிஸ்தானில் ஆயுததாரிகளுடன் நடந்த சண்டைகளின்போது இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேபோன்று வடகிழக்கு காபூலில் இடம்பெற்ற ஓர் மோதலில் பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டைகளை முன்னெடுக்க கூடுதல் துருப்புக்களை அனுப்ப நேட்டோ நாடுகள் திட்டமிட்டுள்ள நிலையில், பன்னாட்டு படையின் இராணுவ வீரர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.

Read more...

ஆப்கானிஸ்தான் மக்கள் திருப்தியுடனும் நம்பிக்கையுடனும் இருப்பதாகக் காட்டுகிறது


ரொட்டி விற்கும் ஆப்கானிய வியாபாரிகள்ஆப்கானிஸ்தானில் ஊழலும், வன்செயல்களும் இன்னமும் பெரும் பிரச்சினைக்குரிய விடயங்களாகத் திகழுகின்ற போதிலும், அங்கு நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று, அந்த நாட்டு மக்கள் தமது வாழ்க்கை நல்ல நிலைமையில் இருப்பதாக உணர்வதாகவும், மற்றும் தமது எதிர்காலம் குறித்து நல்ல நம்பிக்கையுடன் இருப்பதாகவும் பரிந்துரைத்துள்ளது.
பி.பி.சி., அமெரிக்காவின் ஏ.பி.சி. செய்தி மற்றும் ஜேர்மனியின் ஏஆர்டி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்தக் கருத்துக்கணிப்பில், ஆப்கானின் அனைத்து மாகாணங்களில் இருந்தும், 1500 பேரிடம் நேரடியாக கருத்துகள் பெறப்பட்டன.
ஆப்கானிஸ்தான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருப்பதாக, கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட 70 வீதமானவர்கள் கூறியிருக்கிறார்கள். இது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டதை விட கணிசமான அளவு அதிகமாகும்.
அதிகாரிகளின் ஊழல் என்பது தமது பகுதிகளில் பெரும் பிரச்சினை என்று 90 வீதமானவர்கள் கூறியுள்ளனர்.

Read more...

தாக்குதலை நியாயப்படுத்த டோகோ கிளர்ச்சிக் குழு தலைவர் முயற்சி

இதனிடையே நாடு கடந்த நிலையில் பிரான்ஸில் வாழ்ந்து வரும் அங்கோலாவின் ஒரு கிளர்ச்சிக் குழுவின் தலைவர், டோகோ நாட்டு அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அங்கோலாவில் போர் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
ஃபிளெக் எனப்படும் கபிண்டா பிரிவினைவாதக் குழுவினருக்காக பேசவல்லவர் என்று தன்னை கூறிக் கொள்ளும் ரோட்ரிக்ஸ் மின்காஸ், கபிண்டாப் பகுதியில் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்துவதை எதிர்த்து, ஏற்கனவே ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது எனக் கூறுகிறார்.
இது போன்ற தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும், இது வன்முறையை தூண்டும் ஒரு செயல் என்றும் தெரிவித்துள்ள பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம், எனினும் இந்தக் கருத்துக்கள் புறந்தள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.

Read more...

டோகோ கால்பந்தாட்ட வீரர்கள் மீதான தாக்குதல்: சந்தேகநபர்கள் இருவர் கைது


கடந்த வெள்ளிக்கிழமையன்று டோகோ நாட்டு கால்பந்து அணி மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் இருவரை போலீசார் கைது செய்துள்ளதாக அங்கோலாவின் அரச கட்டுபாட்டு வானொலி தெரிவித்துள்ளது.
எண்ணெய் வளம் மிகுந்த கபிண்டாப் பகுதியில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதிக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று கோரி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.
இதனிடையே அங்கோலாவில் நடைபெற்றுவரும் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டிகளிலிருந்து விலகிக்கொள்வதாக டோகோ நாட்டு அணி விடுத்த வேண்டுகோளை ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனம் நிராகரித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக அனுஷ்டிக்கப்படும் மூன்று நாள் தேசிய துக்கத்தில் பங்கு பெறுவதற்காக, டோகோ நாட்டு அரசின் உத்தரவுக்கமைய அந்நாட்டு அணி நாடு திரும்பியுள்ளது.
தமது நாட்டின் அணியின் மீது மறைந்திருந்தவர்கள் நடத்திய தாக்குதல் ஆப்பிரிக்க கால்பந்து விளையாட்டுக்கே ஏற்பட்ட ஒரு வெட்கக்கேடான செயல் என்று டோகோவின் பிரதமர் வர்ணித்துள்ளார்.
தங்களது நாட்டு அணியின் பாதுகாப்பை அங்கோலா அரசு உறுதிசெய்யத் தவறிவிட்டது என்று கூறி அந்நாட்டை டோகோவின் பிரதமர் விமர்சித்துள்ளார்

Read more...

மனைவியின் காதலன்: நெருக்கடியில் வட அயர்லாந்து முதல் அமைச்சர்



வட அயர்லாந்தின் முதல் அமைச்சர் பீட்டர் ராபின்சன் அவர்கள் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் தலைவராக தொடர்வதற்கு அந்தக் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ராபின்சன் அவர்கள் தனது நடத்தை தொடர்பாகவும், பதின்ம வயது காதலனுக்கு தொழில் தொடங்க நிதி சேகரித்த அவரது மனைவி ஐரிஸின் நடத்தை தொடர்பாகவும் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.
தனது கட்சியினரின் ஆதரவைப் பெற்றுவிட்டாலும், ராபின்சன் அவர்கள் இன்னமும் தனது அரசியல் எதிரிகளிடம் இருந்து பெரும் சவால்களை எதிர்கொள்கிறார்.
இந்த ஊழல், வட அயர்லாந்தின் அதிகாரப் பகிர்வு உடன்பாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

Read more...

உல்ஃபா தலைவருடன் முஷாரப் ரகசிய சந்திப்பு

>> Sunday, January 10, 2010

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் வங்கதேசம் வந்தபோது, உல்ஃபா தலைவர் அனுப் சேட்டியாவை ரகசியமாக சந்தித்துப் பேசியதாக அந்நாட்டு மூத்த அமைச்சர் அஷ்ரஃபுல் இஸ்லாம் குற்றம் சாற்றியுள்ளார். வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் கலீதா ஜியா ஆட்சியிலிருந்தபோது டாக்கா வந்த முஷாரப், உல்ஃபா தலைவர் அனுப் சேட்டியா டாக்கா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அவரை சந்திக்க முஷாரப் விருப்பம் தெரிவித்ததையடுத்து, அனுப் சேட்டியா முஷாரப் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு இருவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் தனியாக சந்தித்துப் பேசியதாக அஷ்ரஃபுல் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த 1996 - 2001 ஆம் ஆண்டில் கலீதா ஜியாவின் பங்காளதேஷ் தேசிய கட்சி ஆட்சியிலிருந்தபோது, எல்லை தாண்டி ஊடுருவிய குற்றச்சாற்றின்பேரில் உல்ஃபா தலைவர் அனுப் சேட்டியா கைது செய்யப்பட்டார்.அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னரும், இன்னமும் அவர் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more...

அமெரிக்க விமானங்களை தகர்க்க 20 தற்கொலை படைவீரர்கள்

அமெரிக்க விமானங்களை தகர்க்க தன்னைப் போன்று 20 தற்கொலைப் படை வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளதாக நைஜீரிய தீவிரவாதி கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று அமெரிக்க விமானத்தை தகர்க்க நவீன வெடிகுண்டுகளுடன் வந்த நைஜீரியாவை சேர்ந்த உமர் பாரூக் அப்துல்லா என்ற அல் - காய்தா தீவிரவாதியின் முயற்சி கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது.
அந்த தீவிரவாதியை கைது செய்து விசாரணை நடத்தியதில், தன்னைபோன்று மேலும் 20 வீரர்களுக்கு ஏமனில் இதுபோல் விமானத்தை தகர்க்க வெடிகுண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளான்.இதனைத் தொடர்ந்தே அமெரிக்க விமானங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more...

கைப்பற்றப்பட்டது பிரபாகரன் துப்பாக்கி அல்ல: இலங்கை கடற்படை மறுப்பு

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய பிரத்தியேக துப்பாக்கியை வெள்ளமுள்ளி வாய்க்காலிலிருந்து கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவித்திருந்த நிலையில், அதனை அந்நாட்டு கடற்படை மறுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய பிரத்தியேக துப்பாக்கியை வெள்ளமுள்ளி வாய்க்காலிலிருந்து கைப்பற்றியதாக கடந்த திங்கட்கிழமையன்று ராணுவம் அறிவித்திருந்தது.
மேற்படி துப்பாக்கி வெள்ளமுள்ளி வாய்க்கால் பகுதியில் புதைக்கப்பட்டிருந்ததை, தமது தடுப்புக் காவலில் உள்ள விடுதலைப்புலித் தலைவர் ஒருவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அதனைக் கைப்பற்றியதாக ராணுவம் கூறியிருந்தது. குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது இலங்கை கடற்படை இதனை மறுத்துள்ளது. உண்மையில் அந்த M 16 A 2 துப்பாக்கியானது, கடந்த 1988 ஆம் ஆண்டு பாலம்பட்டாறு, திரிகோணமலையில் கடற்படையினருடன் நடந்த போரில் புலிகளால் கைப்பற்றப்பட்ட ஆயுதமே அன்றி பிரபாகரனின் ஆயுதம் அல்ல எனக் கூறியுள்ளது கடற்படை.
இராணுவத்தின் அறிக்கையை இவ்வாறு கடற்படையினர் வெளிப்படையாகவே நிராகரித்துள்ளனர்.இந்தத் துப்பாக்கி தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக இராணுவத்தினருக்கும், கடற்படையினருக்கும் கருத்து முரண்பாடுகள் இருந்துவருகிறது.தாங்கள் விடுதலைப் புலிகளை சுற்றிவளைத்தபோதும், கடற்படையினர் கவனக்குறைவால் பல விடுதலைப் புலிகள் கடல்மார்க்கமாக தப்பிச் சென்றதாக சர்சைக்குரிய சில விடயங்களை இராணுவம் தெரிவித்துவருவதும், அதனை கடற்படையினர் நிராகரித்தும் வருவதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகிறது

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்குகள் இந்து சமய முறைப்படி அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக அவரது உடலை யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் அளிக்குமாறு கனடாவிலுள்ள அவரது மகள் வினோதினி ராஜேந்திரன், கனடாவிலுள்ள இலங்கைக்கான தூதரக அதிகாரி மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கான சட்ட அதிகாரம் தமக்கு இருப்பதால் அதுகுறித்து அதிபருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், அதற்கான அனுமதியை எழுத்து மூலம் தனக்கு வழங்கியிருப்பதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். வெளிநாடுகளில் தங்கியிருக்கும் அவரது பிள்ளைகள் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்கான அனுமதி அதிபர் ராஜபக்சவால் வழங்கப்பட்டிருக்கும்போதும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் கலந்துகொள்ளமாட்டார்கள் எனவும் சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளார்.வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்குகளை பொரள்ளை கனத்தை மயானத்தில் நடத்துவதற்கு ஹோமாகம பதிவாளரும், மரண விசாரணை அதிகாரியும் முதலில் அனுமதி வழங்கியிருந்தனர். எனினும், இந்த அனுமதி ரத்துச் செய்யப்பட்டு இறுதிக் கிரியைகளை வல்வெட்டித்துறையில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில், நாளை 10 ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் வல்வெட்டித்துறை பொது மயானத்தில், வேலுப்பிள்ளையின் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

Read more...

கலிஃபோர்னியாவில் கடும் நிலநடுக்கம்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக இது பதிவாகியுள்ளது. கலிஃபோர்னியாவின் வடக்கு பகுதியான யுரேகாவில் இருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. க‌லிஃபோ‌ர்‌னியா‌வி‌ன் இதே பகுதியில் நடந்த 1994 ஆம் ஆண்டு 6.7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர். 9,000 பேர் காயமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

தில்லி விளையாட்டு கிராமத்தில் தீ விபத்து


இந்திய தலைநகர் புது தில்லியில் இந்த வருடம் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டுக் கிராமத்தில் தீ பற்றிக்கொண்டதில், ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
நிர்மாணப் பணியாளர்களுக்கான வதிவிட விடுதியில் இந்த தீ ஏற்பட்டது.
நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற ரக்பி விளையாட்டரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டு இரு வாரங்களின் பின்னர் தற்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திட்டமிட்ட காலப்பகுதிக்குள் சில முக்கிய நிர்மாணங்களை முடிக்க முடியாமல் போய்விடும் என்று எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில், பணிகளை விரைவாக முடிக்கும் அழுத்தங்களுக்கு நிர்வாகிகள் உட்பட்டுள்ளனர்

Read more...

ஆப்பிரிக்க கோப்பை போட்டிகள் ஆரம்பம்


டோகோ அணி போட்டியில் பங்குபெறுமா இல்லையா என எழுந்த குழப்பங்களுக்கு மத்தியில், ஆப்பிரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்காக போட்டியிடும் நாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குபெறுகின்றன.
ஆரம்பப் போட்டியில், போட்டிகளை நடத்தும் அங்கோலா நாட்டின் அணி , மாலி அணியை சந்திக்கவுள்ளது.
தலைநகர் லுவாண்டாவுக்கு வெளியயே உள்ள புதிய விளையாட்டரங்கில், ரசிகர்கள் ஏற்கனவே கூடியுள்ளனர்.
அங்கு விளையாட்டரங்கில் உற்சாகம் களைகட்டியுள்ளதாக அங்குள்ள பிபிசி நிருபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அங்கோலாவின் விளையாட்டு சரித்திரத்தில் மிகப்பெரிய பெருமைக்குரிய இந்த தினம், கபிந்தாவில் டோகோ அணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து சோகத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Read more...

டோகோ அணி நாடு திரும்பும் - பிரதமர் திட்டவட்ட அறிவிப்பு

அங்கோலாவில் நடைபெறுகின்ற ஆப்பிரிக்க கோப்பை கால் பந்தாட்டப் போட்டிகளிலிருந்து மீள அழைத்துக் கொள்ளப்பட்ட தமது அணியினர் இன்று ஞாயிற்றுகிழமை நாடுதிரும்பவுள்ளதாக டோகோ பிரதமர் தெரிவித்துள்ளார்.

கபிந்தாவில் டோகோ அணியினரின் பஸ் மீது கடந்த வெள்ளிகிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

டோகோ அணியிலுள்ள சில விளையாட்டு வீரர்கள் தொடர்ந்தும் விளையாட வேண்டும் என தெரிவித்த போதிலும் அணியின் பாதுகாப்புக் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அங்கோலா பிரதமர் கில்பர்ட் ஹொங்போ தெரிவித்தார்.

தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து தமக்கு உரிய முறையில் அறிவிக்கப்படவில்லையெனவும் அங்கோலா பிரதமர் ஆப்பிரிக்க கால்பந்தாட்ட சம்மேளனத்தை விமர்சித்துள்ளார்


Read more...

தாவூத் இப்ராகிமை அபாயகரமான தீவிரவாதியாக அறிவித்தது யு.எஸ்.

>> Friday, January 8, 2010

பிரபல நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமை அபாயகரமான தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கா விடுத்துள்ள அறிக்கையில்,பாகிஸ்தான்,இந்தியா மற்றும் அரேபிய நாடுகளில் தாவூத் இப்ராகிமின் நாசவேலை கும்பலைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் உள்ளதாகவும், தெற்காசியாவில் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு தாவூத்தும், அவனது ஆதரவுக் கும்பலும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பில் உள்ளனர்.இந்த கூட்டணி அபாயகரமானது என்றும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் தாவூத் இப்ராகிம் பற்றிய முழுவிபரங்களும் அந்த அறிக்கையில் விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது.

Read more...

பாக். இராணுவத்திலிருந்து ஓடி வந்தவர் ராணா



லஷ்கர் தீவிரவாதி என்ற குற்றச்சாற்றின் பேரில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட ராணா, தாம் பாகிஸ்தான் இராணுவத்திலிருந்து ஓடி வந்தவர் என்று தெரிவித்துள்ளார்.

லஷ்கர் இயக்கத்தின் உத்தரவின் பேரில், இந்தியா உட்பட பல இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக டேவிட் ஹெட்லி மற்றும் ஹுசேன் ராணா ஆகிய இருவரையும் அமெரிக்கா புலனாய்வு துறையான எப்பிஐ அதிகாரிகள், கடந்த அக்டோபர் மாதம் கைது செய்திருந்தனர்.

இவர்கள் மீதான வழக்கு சிகாகோ மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிற நிலையில், தம்மை பிணையில் விடக்கோரி ராணா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவில் தாம் பாகிஸ்தான் இராணுவத்தில் பணியாற்றியதாகவும், பாதியிலேயே அதைவிட்டுவிட்டு ஓடிவந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தம்மை பிணையில் விடுவித்தால் தம்மால் மீண்டும் பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்ல முடியாது என்பதால், தமக்கு பிணை விடுதலை அளிக்குமாறும் அதில் அவர் மேலும் கூறியுள்ளார்.

Read more...

சிகாகோவில் பனிப்புயல்: 500 விமானங்கள் ரத்து

அமெரிக்காவின் சிகாகோ நகரில் வரலாறு காணாத வகையில் பனிப்புயல் தாக்கியதால் அந்த நகரில் இருந்து புறப்பட வேண்டிய 500 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

வடக்கு இல்லினாய்ஸ், வடகிழக்கு இண்டியானா மாகாணங்களுக்கு அமெரிக்க தேசிய வானிலை மையம் இன்று விடுத்துள்ள பனிப்புயல் அபாய எச்சரிக்கை மதியம் வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயல் காரணமாக சிகாகோவில் 8 முதல் 12 இன்ச் உயரம் வரை அனைத்து இடங்களிலும் பனிப் பொழிவு இருந்தது. இதையடுத்து சிகாகோவில் உள்ள ஓஹாரி சர்வதேச விமான நிலையம், மிட்வே விமானநிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 500 உள்ளூர், சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க விமான போக்குவரத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கடுமையான பனிப்பொழிவின் காரணமாக சிகாகோவில் செயல்படும் 150க்கும் அதிகமான பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான படுகொலைக் காட்சி உண்மையானது: ஐ.நா.

சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான படுகொலைக் காட்சியின் வீடியோப் பதிவு உண்மையானதுதான் என ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பிரதிநிதி பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ காட்சியை 3 நிபுணர்கள் உண்மை என உறுதி செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.அவர்களின் முடிவு சரியானது. விடியோக் காட்சி உண்மையானதே என அவர் மேலும் கூறினார்

Read more...

அமெரிக்கா தூதரக அதிகாரிகளை பாக். துன்புறுத்துவதாக புகார்

இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் அரசு பல்வேறு வகையில் துன்புறுத்தி வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத்திலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் இந்த குற்றச்சாற்றைக் கூறியுள்ளனர்.அமெரிக்க தூத்ரகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் வெளியில் அவர்களது கார்களை இடைமறித்து, தேவையற்ற விசாரணைகளை மேற்கொள்வதாகவும் அவர்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.

நேற்று முன்தினம் வளர்ச்சி திட்டம் ஒன்றை பார்வையிடுவதற்காக பலுசிஸ்தானுக்கு சென்ற அமெரிக்க தூதரக அதிகாரிகளும், அவர்களுக்கு பாதுகாப்பாக சென்ற பாதுகாவலர்களும் வழியிலேயே தடுத்து நிறுத்தபட்டதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாகிஸ்தானுக்கு சமீபத்தில் அமெரிக்கா அறிவித்த 7.5 பில்லியன் மனிதாபிமான உதவி திட்டங்களை செயல்படுத்துவதற்கு கூடுதல் அமெரிக்க பணியாளர்க்ள் தேவைப்படுவதால், அவர்களுக்கான விசா விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிப்பதில் வேண்டுமென்றே இழுபறி செய்து தாமதப்படுத்தி வருவதாகவும் அவர்கள் மேலும் குற்றம் சாற்றியுள்ளனர்.

அமெரிக்காவின் இந்த பகிரங்க குற்றச்சாற்று இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்க இத்தகைய குற்றச்சாற்றைக் கூறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது


ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்பு படிப்பதற்காக விசா கோரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஜூலை அக்டோபர் காலத்தில் 46 வீதம் குறைந்து விட்டதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய மாணவர்கள் மீது மெல்போர்னிலும், சிட்னியிலும் நடந்த தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு விசா விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.

மெல்போர்னில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இந்திய அரசு இவ்வார முற்பகுதியில் பயண எச்சரிக்கை ஒன்றை அளித்துள்ளது.

Read more...

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை கொன்றுள்ளதாக இந்தியா கூறுகிறத


இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் மாநிலத்தின ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் இருந்த விடுதியை தாம் தாக்கி அதிலிருந்த 2 தீவிரவாதிகளை கொன்றுவிட்டதாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதன் மூலம் அங்கே 24 மணிநேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட ஒருவர் பாகிஸ்தானிய பயங்கரவாத இயக்கமான, லஷ்கர் இ தோயிபாவைச் சேர்ந்தவர் என்று மாநில காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமையன்று, ஐன நெருக்கடி மிக்க சந்தைப் பகுதியில் கையெறிகுண்டுகளை வீசிய தீவிரவாதிகள் அதன் பிறகு அங்கே துப்பாக்கிப் பிரயோகமும் செய்தனர்.

அதன் பிறகு அவர்கள் ஒரு ஒட்டலில் பதுங்கினர். இந்திய ஆளுகைக்கு எதிராக காஷ்மீரில் நெடுங்காலமாக கிளர்ச்சி நடைபெற்று வருகிறது.

Read more...

எகிப்தில் 6 கிறிஸ்துர்வர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்


எகிப்திய கிறிஸ்தவர்களில் ஒருபிரிவான காப்டிக் கிறிஸ்தவர்கள் ஆறுபேரும், காவல்துறையைச்சேர்ந்த ஒருவரும், வாகனத்தில் வந்த ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, காப்டிக் கிறிஸ்தவர்கள் நடத்திய ஆர்பாட்டத்தின்போது அவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் உருவானது.

எகிப்தின் தெற்குப்பகுதியில் இருக்கும் ஒரு கிறித்தவ தேவாலயத்திலிருந்து பிரார்த்தனை முடித்து விட்டுத் திரும்பிய கிறித்தவர்கள் மீது வாகனத்தில் வந்தவர் நடத்திய ஆறுபேர் கொல்லப்பட்டனர்.

காப்டிக் கிறித்தவர் ஒருவர், முஸ்லீம் பெண்ணை கற்பழித்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்வினையாக இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிரதான துப்பாக்கிதாரி முஸ்லீம் என்று காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். ஆனாலும் இது தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் குழுமிய ஆர்பாட்டக்காரர்கள் கல்லெறிதலில் ஈடுபட்டதைத்தொடர்ந்து இந்த மோதல்கள் உருவாயின.

Read more...

இலங்கை படுகொலை ஒளிநாடா உண்மையானது என்று ஐ நா அதிகாரி கருத்து



இலங்கை படையினர் சட்ட விரோதமாக கொலைகளில் ஈடுபடுவதாகக் காட்டும் ஒளிநாடாக் காட்சிகள், பெரும்பாலும் உண்மையானவையே என்று ஐ நா வின் மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

சித்ரவதை மற்றும் சட்ட விரோத கொலைகள் குறித்த ஐ நா மன்ற சிறப்பு அதிகாரி பிலிப் ஆல்ஸ்டன் மூன்று பக்கசார்பற்ற வல்லுநர்கள், இந்த ஒளிநாடா உண்மையானதுதான் என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள் என்றும், எனவே இது குறித்து ஒரு விசாரணை வேண்டும் என்றும் மீண்டும் கோரியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஜனநாயகத்துக்கான இலங்கை பத்திரிகையாளர்கள் என்கிற ஒரு அமைப்பு அனுப்பிய அந்த ஒளிநாடாவில், அரச படையினர் போல தோற்றம் அளிப்பவர்கள், நிர்வாணமாக்கப்பட்ட நிராயுதபாணிகள் சிலரை சுட்டுக் கொல்வது போன்ற காட்சிகள் காணப்பட்டன.

இந்த ஒளிநாடா போலியானது, திரிபுபடுத்தப்பட்டது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிவந்துள்ளது.

Read more...

ஜம்முவில் ப்ரீபெய்டு இணைப்புகள் மீதான தடை தற்போது நீக்கப்படாது: மத்திய அரசு

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு-காஷ்மீரில் ப்ரீபெய்டு மொபைல் இணைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை தற்போது நீக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பயங்கரவாதிகள் கைகளுக்கு ப்ரீபெய்டு மொபைல் இணைப்புகள் எளிதாக சென்றடைவதால், ஜம்மு-காஷ்மீரில் அதற்கு தடைவிதிப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மத்திய அரசிடம் இருந்து விளக்கம் கோரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.எஸ்.சௌகான் தலைமையிலான பெஞ்ச் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அதில் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், “பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்முவில் ப்ரீபெய்டு மொபைல் இணைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்கு பின்னர் பயங்கரவாத செயல்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. எனவே, தடையை உடனடியாக நீக்க முடியாது” என்றார்.

இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 25ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Read more...

பேச்சுவார்த்தைக்கு உல்ஃபா: கோகாய் நம்பிக்கை

அஸ்ஸாம் விடுதலைக்காக போராடிவரும் தீவிரவாத இயக்கமான உல்ஃபா பேச்சுவார்த்தைக்கு வரும் சாத்தியம் உள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.

கொல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கோகாய், “தங்களுடைய கோரிக்கை குறித்து விவாதிக்க அவர்கள் முன்வருவார்கள் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. விரைவில் எழுத்துப்பூர்வமாக அவர்களின் கோரிக்கை வரும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

அஸ்ஸாமின் இறையாண்மை தவிர்த்து மற்ற அனைத்துக் கோரிக்கைகள் குறித்தும் பேசத் தயார் என்று கூறியுள்ள கோகாய், உல்ஃபா அமைப்பின் தலைமைத் தளபதி பரேஷ் பரூவா இல்லாமலேயே பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதெனவும், வேலைவாய்ப்பின்மையே தீவிரவாதம் வளர்வதற்குக் காரணம் என்றும் கூறியுள்ளார்.

உல்்பா அமைப்பின் தலைவர் அரபிந்தோ ராஜ்கோவா வங்க தேசத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவர் தற்போது சிறையில் உள்ளார்.

Read more...

‘கோப்ரா’ படையின் பெயர் மாற்றப்பட்டது

சட்டீஸ்கர் உள்ளிட்ட மத்திய இந்தியாவின் பழங்குடியினர் வாழும் மாவட்டங்களில் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறப்படும் கோப்ரா என்றழைக்கப்படும் மத்திய கூடுதல் காவற்படையின் பெயர் சிறப்பு நடவடிக்கைப் படை என்று மாற்றப்பட்டுள்ளது.

‘காமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசலியூட் ஆக்ஸன்’ என்பதின் சுறுக்கமே ‘கோப்ரா’ என்பது. நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில்தான் இப்பெயர் கொண்ட படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று அரசு கூறினாலும், பழங்குடியினருக்கு எதிராகத்தான் பயன்படுத்தப்படுகின்றனர் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாற்றி வருகின்றன.

நக்ஸலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் ஆகியோருக்கு எதிரான நடவடிக்கை எடுக்க இப்படையினர் உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகமும் கூறிவருகிறது. இப்படைகள் மேற்கொண்டுவரும் ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ எனும் நடவடிக்கை, வளம் மிகுந்த பகுதிகளில் இருந்து பழங்குடியினரை அடித்து விரட்டவே பயன்படுத்தப்படுகிறது என்று அப்பகுதியில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுவரும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கோப்ரா என்ற பெயர் அப்பகுதிகளில் கேலியாக சித்தரிக்கப்படுகிறது. மாவோயிஸ்ட்டுகளும் தங்கள் பங்கிற்கு சுவரொட்டிகளை அடித்து, இப்படைகளை குரங்குகள் என்று வர்ணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கோப்ரா என்ற பெயரை நீக்கிவிட்டு, அதற்கு சிறப்பு நடவடிக்கைப் படை (ஸ்பெஷல் ஆக்சன் ஃபோர்ஸ்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Read more...

சீட்டா வகை சிறுத்தைகளை இந்திய காடுகளில் குடியேற்ற திட்டம்

>> Thursday, January 7, 2010


இந்தியாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி அழிக்கப்பட்ட சீட்டா என்ற ஒரு வகை சிறுத்தைகளை மீண்டும் இந்தியக் காடுகளில் அறிமுகப்படுத்த ''வைல்ட்லைப் டிரஸ்ட் ஆப்''( வன உயிர் காப்பகம்) இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கு இந்திய மத்திய அரசு ஆதரவு நல்கியுள்ளது. ராஜஸ்தான், குஜராத் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

ஆனால் ஏற்கனவே நாட்டில் இருக்கும் புலி, யானை, காண்டாமிருகம் போன்ற வன விலங்குகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க முடியாத நிலையில், புதிதாக ஒரு மிருகத்தை கொண்டுவருவது தேவையில்லை என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

சோதனை முறையில் முதலில் ஒரு சில சிறுத்தைகள் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்டு பெரிய அளவிலான திறந்த வெளி தடுப்புப் பகுதிகளில் அவை விடப்படும் என்றும் இம்முயற்சிக்கு கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் வைல்ட் லைப் டிரஸ்ட் ஆப் இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் இராமன் சுகுமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

Read more...

பாபர் மசூதி இடிப்பு விசாரணை அறிக்கை தாக்கல்


இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி 1992 ஆம் இடிக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட லிபரஹான் விசாரணை ஆணைக் குழு தனது அறிக்கையை இந்திய அரசிடம் சமர்பித்துள்ளது.

இந்த அறிக்கையில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் மீது குற்றம் காணப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையும் அதன் மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கை குறித்த அறிக்கையும் இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அறிக்கைகள் குறித்து விஸ்வ இந்து பரிஷத்தின் தேசிய துணைத் தலைவர் வேதாந்தம் அவர்களின் கருத்தையும், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹருல்லா அவர்களின் கருத்துக்களையும் இங்கு கேட்கலாம்.

Read more...

இரண்டாம் உலகப் போர் ஆரம்பத்தின் 70 ஆண்டுகள் நிறைவு


இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானதாக கருதப்படும் தினத்தின் 70 ஆண்டுகளை குறிக்கும் வகையில், போலந்தில் வைபவங்கள் நடக்கின்றன. உலகமெங்கும் பரந்துபட்டு நடந்த அந்தப் போர் உலகிலேயே மனித குலம் இதுவரை சந்தித்த மிகப்பெரிய அழிவுக்கு காரணமாகியது.

அது ஒரு முழுப் போர்- ஒட்டுமொத்தமாக, முன்னெப்போதும் இல்லாதபடி , அனைத்து உலகத்தையும் அது ஆக்கிரமித்தது. அதில் பங்கேற்ற முக்கியமான தரப்பினர், தமது தொழில்துறை, பொருளாதாரம் மற்றும் விஞ்ஞான முயற்சிகள் அனைத்தையும் மோதலுக்காக அர்ப்பணித்தனர்.

உலெகெங்கும் இருந்து பத்துக்கோடி படைச் சிப்பாய்கள் இந்தப் போரில் சண்டையிட்டனர். 5 முதல் 7 கோடிப்பேர் அதில் கொல்லப்பட்டனர்.

இரண்டாம் உலகப்ப் போர் காலகட்ட சோவியத் சுவர்ரொட்டி ஒன்று

இறந்தவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். அதிலும் அதிகத் தொகையினர் இறந்தது சோவியத் ஒன்றியத்தில். தொற்று நோய்களும், பட்டினியும் பலரைப் பலிகொண்டுவிட்டன.

ஜேர்மனிக்கு எதிரான பிரிட்டனின் போர் அறிவிப்பு, பிரித்தானியாவின் காலனித்துவ நாடுகள் அனைத்தையும் தவிர்க்க முடியாமல் போரில் இழுத்து விட்டது.

பெரும் எண்ணிக்கையிலான துருப்புக்காவிக் கப்பல்களும், ஆயுதக்கப்பல்களும் சமுத்திரங்களைக் கடந்து சண்டையிடச் சென்றதால், ஆஸ்ரேலியா, கனடா முதல் இந்தியா வரை அனைத்து நாடுகளில் இருந்தும் படையினர் சண்டையில் குதிக்கச் செய்யப்பட்டனர்.

உதாரணமாக பெரும் எண்ணிக்கையிலான இந்தியர்கள் வட ஆப்பிரிக்காவிலும், இத்தாலியின் மீதான நேச நாடுகளின் படையெடுப்பிலும் சண்டையிட்டார்கள்.

போர் வீரர்களின் சமாதிகள்

ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட இரண்டு பிராந்தியச் சண்டைகளே இந்த இரண்டாம் உலகப்போர் ஆரம்பமாக காரணம் என்கிறார் மிகப் பிரபலமான பிரிட்டிஷ் வரலாற்று ஆய்வாளரான, சேர் மைக்கல் ஹொவார்ட். அதில் ஒன்று சீனாவின் மீதான ஜப்பானிய விஸ்தரிப்பு. அடுத்தது 1939 ஆண்டு ஜேர்மனி, போலந்தை தாக்கிய நடவடிக்கை. அது ஐரோப்பாவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான மோதல்களுக்கு மீண்டும் வழி செய்தது.

ஜேர்மனியின் சோவியத் ஒன்றியத்தின் மீதான தாக்குதலாலும், பேர்ள் காபரில் இருந்த அமெரிக்க கடற்படை மற்றும் தென்கிழக்காசியாவில் இருந்த ஐரோப்பிய அதிகார மையங்ககள் ஆகியவற்றின் மீதான ஜப்பானிய தாக்குதலாலும், 1941 இல் இந்த போர் உலக மட்டத்துக்கு விரிவாக்கப்பட்டது.

சோவியத்தில் ஏற்பட்ட அழிவு

இந்த போரின் விளைவாக ஐரோப்பிய பிளவுகள் மேலும் ஆழமாகியதுடன், அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகியவை வல்லரசுகளாகவும் உருவெடுத்தன.

ஆசியாவின் ஆட்சிகளிலும் இது பல மாற்றங்களுக்கு காரணமாகியது. அதுமாத்திரமல்ல, ஐரோப்பிய காலனித்துவ நாடுகளில் ஒப்பீட்டளவில் வீழ்ச்சியையும், வறுமையையும், ஏற்படுத்தியதுடன், அவை காலனித்துவ ஆட்சியில் இருந்து மீளவும் வழி அது செய்தது.

Read more...

எய்ட்ஸ் தடுப்பு மருந்து: ஆராய்ச்சியில் முன்னேற்றம்


தாய்லாந்தில் 16 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்களிடம் நடத்தப்பட்டுள்ள இந்த மருந்துப் பரிசோதனை அமெரிக்க இராணுவத்தின் நிதி உதவியோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன் இந்த தடுப்பு மருந்து பரிசோதனை ஆரம்பமானது. எய்ட்ஸை உண்டாக்கும் நோய்க்கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தைக் கண்டறிவதில் அண்மைய ஆண்டுகளாக ஓர் தேக்கநிலை இருந்து வந்தது.

தன்னார்வலர்களில் ஒரு பகுதியினருக்கு புதிய தடுப்பு மருந்தும் இன்னொரு பகுதியினருக்கு வெற்று ஊசியும் போடப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களுக்கு வெற்று மருந்து கொடுக்கப்பட்டவர்களை விட முப்பது சதவீதம் கூடுதலாக ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படுவதற்கான ஆபத்து குறைந்துள்ளது.

Read more...

பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்க நீதிமன்றம் ஆலோசனை


இந்தியாவில் பாலியல் தொழிலை பலனளிக்கும் வகையில் தடைசெய்ய அரசாங்கத்தால் இயலவில்லை என்கிற ஓர் நிலையில், பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்குவது பற்றி இந்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கினால் அது பாலியல் தொழிலாளிகளுக்கு புனர்வாழ்வு கிடைக்க உதவும் என்றும், பெண்கள் பாலியல் தொழிலுக்காக சட்டவிரோதமாக கடத்தப்படுவதைத் தவிர்க்க உதவும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்தியாவில் சிறுமி ஒருத்தி பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசு சாரா உதவி அமைப்பு ஒன்று தொடுத்திருந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

இந்தியாவில் விபச்சாரம் சட்டப்படி குற்றமென்றாலும், இந்தியாவெங்கும் பாலியல் தொழில் செழிப்பாக நடந்து வரவே செய்கிறது.

இந்த அணுகுமுறை சரியா என்று, பி.யு.சி.எல் எனப்படும் மனித உரிமை அமைப்பின் தேசிய துணைத் தலைவர் சுதா ராமலிங்கம் அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்த கருத்துக்களை இங்கு கேட்கலாம்.

Read more...

அணுக் குண்டுகளுக்கு தப்பியவர் காலமானார்


ஐப்பானில் இரண்டாம் உலகப் போரின் போது வீசப்பட்ட இரு அணு குண்டுகளிலும் அகப்பட்டு அவற்றின் மூலம் ஏற்பட்ட பாதிப்புக்களில் இருந்து தப்பிப் பிழைத்தவராக அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே நபர் மரணமடைந்துவிட்டார்.

சுடோமா யமாகுசி என்ற அந்த நபருக்கு வயது 93. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதியன்று இவர் அலுவல் காரணமாக ஹிரோஷிமாவுக்கு சென்றிருந்தார்.

அன்று தான் அங்கே முதல் அணு குண்டு வீசப்பட்டது. இதில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தனர். இந்த குண்டு வீச்சால் பெருமளவு தீக்காயங்களுக்கு இலக்கான யாமாகுச்சி தனது வீடு இருக்கும் நாகசாகிக்கு அடுத்த நாள் திரும்பினார்.

ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி நாகசாகியில் அணு குண்டு வீசப்பட்டபோது அவர் அங்கிருந்தார். இந்த குண்டு வீச்சில் 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

Read more...

அமெரிக்கத் தாக்குதலில் 11 பேர் பலி


அமெரிக்க விமானத்தில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகின்றனர்.

வடக்கு வசரிஸ்தானில் உள்ள முக்கிய நகரான மிரான்ஷாவுக்கு மேற்கே முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு இடத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த இடம் தாலிபான்களின் பயிற்சி முகாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

முதல் ஏவுகணைத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்களின் உடல்களை மக்கள் மீட்க முற்பட்டபோது இரண்டாவது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

Read more...

காசா எல்லையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எகிப்திய காவலர் மோதல



காசா எல்லையில் ஆர்பாட்டக்காரர்களுடன் ஏற்பட்ட மோதலில் எகிப்திய எல்லைக் காவலர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

காசாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான எல்லைப் பகுதிக்கு கீழே சுரங்கப் பாதை தோண்டி அதன் வழியாக காசாவுக்கு பொருட்களை கடத்துவதை தடுக்கும் வகையில் ஒரு சுரங்க கட்டமைப்பை எகிப்து அமைத்து வருவதை எதிர்த்து இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

காசா நிர்வாகத்தை நடத்தும் ஹமாசால் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பாலத்தீன இளைஞர்கள் எகிப்திய எல்லைக் காவலர்கள் மீது கற்களை வீசித் தாக்கினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க ஹமாஸ் பாதுகாப்பு படையினர் முற்பட்டனர். இரு தரப்பிலும் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்

Read more...

கார்டன் பிரவுண் குறித்து கட்சிமட்ட வாக்கெடுப்புக்கு கோரிக்கை


பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் அவர்கள் தொடர்ந்தும் தொழிற்கட்சியின் தலைவராக இருக்க வேண்டுமா என்பது குறித்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஒரு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று, இரண்டு முன்னாள் அமைச்சர்கள் கோரியுள்ளனர்.

இராணுவத் துறையின் முன்னாள் அமைச்சரான ஜெஃப் ஹூன் மற்றும் சுகாதாரத் துறையின் முன்னாள் அமைச்சரான பெட்ரீஷியா ஹீவிட் ஆகியோர், கார்டன் பிரவுண் அவர்களின் தலைமை குறித்து கட்சியில் தீவிர பிளவுகள் இருப்பதாகவும், அப்பிரச்சினைக்கு இறுதியான ஒரு முடிவு காணப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

ஜூன் மாதம் பொதுத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், தொழிற்கட்சியினர் மக்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகளில் பின் தங்கியுள்ளனர்.

எனினும் கட்சியுடன் பாரம்பரியமாக நெருங்கிய தொடர்புகளை உடைய தொழிற்சங்கங்களும், பிரதமருக்கு ஆதரவானர்களும் இந்தப் பிரேரணையை கண்டித்துள்ளனர். இது ஒரு திசை திருப்பும் நடவடிக்கை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Read more...

த‌மிழக‌த்‌தி‌ல் 40,399 போ‌லியோ சொ‌ட்டு மரு‌ந்து மைய‌ங்க‌ள

தமி‌ழ்நாட்டில் 40,399 சிறப்பு மையங்கள் மூலம் போ‌லியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன. எனவே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளு‌க்கு சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு பெ‌ற்றோ‌ர்களை த‌மிழக அரசு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது.

போலியோவை நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிப்பதற்காக வரும் 10.1.2010 மற்றும் 7.2.2010 ஞாயிற்றுக் கிழமைகளில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்கள் நாடு முமுவதும் நடத்தப்பட உள்ளன. தமி‌ழ்நாட்டிலும் முகாம்கள் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செ‌ய்யப்பட்டுள்ளன. 5 வயதிற்குட்பட்ட எல்லா குழந்தைகளுக்கும் மேற்கண்ட முகாம் நாட்களின் போது போலியோ சொட்டுமருந்து கூடுதலாக வழங்கப்படும்.

பல்ஸ் போலியோ முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதன் மூலம், தமி‌ழ்நாட்டில் தொடர்ந்து ஆறாம் ஆண்டாக போலியோ இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில், இப்போதும் போலியோவினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த மாநிலங்களிலிருந்து தமி‌ழ்நாட்டுக்கும் போலியோ நோ‌ய்க் கிருமிகள் பரவ வா‌ய்ப்பு உள்ளதால், இந்த ஆண்டும் போலியோ சிறப்பு முகாம்களை வெற்றிகரமாக நடத்த நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளன.

முகாம் நாட்களில் போலியோ சொட்டுமருந்து கொடுக்க வேண்டியதன் அவசியம்:

போலியோவை உண்டாக்கும் வைரஸ் நுண் கிருமிகள் குழந்தைகளை பாதிக்கச் செ‌ய்வதோடு, அவர்களின் கை, கால்கள் மற்றும் உடம்பின் சில பகுதிகளை நிரந்தரமாக ஊனமடையச் செ‌ய்கின்றன. போலியோ நுண் கிருமிகள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன.

இந்நோ‌ய் வருமுன் காப்பதே மேலாகும். அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் நடத்தப்படும் பல்ஸ் போலியோ முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் சொட்டு மருந்து கொடுப்பதுதான். பாதுகாப்பான தடுப்பு மருந்து கொடுக்கப்படும் போது, நோ‌ய் பாதிப்பை உண்டாக்கும் கொடிய நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

வழக்கமாக கொடுக்கும் தடுப்புமருந்தின் மூலம் போலியோ நோ‌ய் பரவாமல் தடுக்கப்பட்டாலும், ஒரே சமயத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுப்பதன் மூலம் போலியோ நுண்கிருமிகள் பரவாமல் சுற்று சூழலிலிருந்து அறவே ஒழிக்க முடியும். ஆகவே ஒரு குழந்தை கூட விடுபடாமல் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டுமருந்து கொடுக்கப்படவேண்டும்.

வெளிமாநிலத்தவர் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து:

கட்டுமானப் பணிகள், மேம்பாலம் மற்றும் இரயில்வே இருப்புப்பாதை சீரமைப்புப் பணிகளில் வெளி மாநிலத்தவர் ஏராளமானோர் தமி‌ழ்நாட்டில் வேலை பார்க்கின்றனர். பிற மாநிலங்களில் போலியோ நோ‌ய்க் கிருமிகள் தற்போது இருந்து வருவதால் அங்கிருந்து வந்து போகும் மக்கள் மூலம் தமி‌ழ்நாட்டு குழந்தைகளுக்கு போலியோ நோ‌ய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே இத்தகைய இடம் பெயர்ந்தோர் குழந்தைகளை தமி‌ழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு செ‌ய்து, அவர்களுக்கும் தவறாமல் சொட்டு மருந்து கொடுக்க சிறப்பு ஏற்பாடு செ‌ய்யப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

1. அனைத்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் 10.1.2010 (ஞாயிற்றுக்கிழமை) முதல் சுற்றின்போது ஒரு தவணை சொட்டு மருந்தும் மீண்டும் (7.2.2010) ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் சுற்றின்போது இன்னொரு தவணையும் கொடுக்கப்பட வேண்டும்.

2. போலியோ சொட்டு மருந்து மிகவும் பாதுகாப்பானது. எத்தனை முறை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அதனால் எந்த பாதிப்பும் இல்லை.

3. ஓரிரு நாட்களுக்கு முன்பு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் முகாம் நாட்களில் மீண்டும் கொடுக்கவேண்டும்.

4. முகாம் நாட்களில் கொடுக்கப்படும் சொட்டு மருந்து வழக்கமான நடைமுறை தவணைகளில் கொடுக்கப்படும் சொட்டு மருந்திற்கு மாற்று அல்ல. இது ஒரு கூடுதல் தவணையாகும்.

5. புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் முகாம் நாட்களில் சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும்.

தமி‌ழ்நாட்டில் 40,399 சிறப்பு மையங்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன. சொட்டுமருந்து வழங்கும் சிறப்பு மையங்கள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக் கூடங்கள் மற்றும் முக்கியமான பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பேருந்து நிலையம், இரயில் நிலையம், விமான நிலையம், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் சுற்றுலா மையங்கள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, முகாம் நாட்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன. தனியார் மருத்துவர்களும் தங்களது மருத்துவ மனைகளில் முகாம் நாட்களின் போது இலவசமாக சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செ‌ய்யப்பட்டுள்ளது.

சுமார் 70 லட்சம் குழந்தைகள் இதன் மூலம் பயன் பெறுவார்கள். இப்பணியைச் சிறப்பாகச் செ‌ய்ய பல்வேறு அரசுத் துறைகள், ரோட்டரி சங்கம் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் சேர்ந்த சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த முகாமில் ஈடுபடுகிறார்கள்.

சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதற்கான அடையாளம் தெரிந்து கொள்வதற்காக, குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள “மை” வைக்கப்படுகிறது. விடுபட்ட குழந்தைகளை கண்டறிந்து, அடுத்தடுத்த நாட்களில் சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செ‌ய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களின் நலன் கருதி சொட்டு மருந்து முகாம்கள் தமி‌ழ்நாடு முழுவதும் அவரவர் வசிப்பிட பகுதிகளுக்கு அருகாமையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி பெற்றோர்கள் அனைவரும் 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளை போலியோ முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். “சொட்டு மருந்து கொடுப்போம்; போலியோவை ஒழிப்போம்; குழந்தை நலம் காப்போம்” எ‌ன்று ம‌க்க‌ள் ந‌ல்வா‌ழ்‌வு‌த்துறை அமை‌ச்ச‌ர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Read more...

இந்தியாவுடன் 1000 ஆண்டு யுத்தத்திற்கு தயார்: சர்தாரி

காஷ்மீர் பிரச்னைக்காக இந்தியாவுடன் 1000 ஆண்டுகள் கொள்கை யுத்தம் நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.

ஆஸாத் ஜம்மு காஷ்மீர் சட்டசபை மற்றும் காஷ்மீர் கவுன்சிலின் கூட்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர், இது (காஷ்மீர் பிரச்னை) ஒரு கொள்கை யுத்தம் என்றும், தலைமுறைத் தலைமுறையாக இது நீடிக்கும் என்றும் கூறினார். 


காஷ்மீர் பிரச்னையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் ஜனநாயக அரசுகள் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிராந்திய அமைதிக்கும், நீண்ட காலமாக இருந்துவரும் காஷ்மீர் பிரச்னைக்கான தீர்வுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறிய சர்தாரி, காஷ்மீருக்கான அமைதியிலிருந்து பிராந்திய அமைதியை பிரித்துவிட முடியாது என்றார்.

இந்த எண்ணத்தை உலக நாடுகளிடையே பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும், தொடர்ந்து அதனை முன்னெடுத்து செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார்.

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக சர்வதேச சமூகம் ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கான நேரம் விரைவிலேயே வரும் என்றும், அமைதியாக வாழ்வதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சர்தாரி மேலும் தெரிவித்தார்.

Read more...

ஜோதிபாசுவிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மன்மோகன் சிங்

நிமோனியா காய்ச்சலாம் அவதிப்பட்டு வரும் மூத்த மார்க்சிஸ்ட் தலைவர் ஜோதிபாசுவை பிரதமர் மன்மோகன் சிங் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மூச்சுத்திணறல், காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு கடந்த ஜனவரி 1ஆம் தேதி கொல்கட்டாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தததால் உயிர் காக்கும் உபகரணங்களின் பொறுப்பில் ஜோதிபாசு வைக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் மதியம் ஒரு மணியளவில் கொல்கட்டா வந்த பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் புத்ததேவ் வரவேற்றார். அங்கிருந்து நேரடியாக சால்ட் லேக் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மன்மோகன் சிங், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஜோதிபாசுவை சந்தித்தார்.

சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்து ஜோதிபாசுவிடம் நலம் விசாரித்த பிரதமர், பின்னர் உடனடியாக கொல்கட்டா விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். பிரதமருடன் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் வந்திருந்தார்.

Read more...

பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை மரணம


கொழும்பில் தனி இடமொன்றில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தந்தை ‌திருவேங்க‌டம் வேலுப்பிள்ளை (86), இன்று காலை மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே இறந்ததாகவும் இலங்கை இராணுவச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக நோய்வாய்பட்டிருந்த வேலுப்பிள்ளைக்கு, எந்த வகையான மருத்துவ உதவிககள் அளிக்கப்பட்டது என்றோ, அல்லது எந்த நோயின் தாக்கம் காரணமாக அவர் இறந்தார் என்பது பற்றியோ இராணுவத் தரப்பு கூற மறுத்துள்ளது.

அவரது உடலை என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்தும் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை.

வேலுப்பிள்ளை தடுத்து வைக்கப்பட்ட அதே இடத்திலேயே பிரபாகரனின் தாயாரும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிலையும் பெரும் சந்தேகத்திற்கிடமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களுக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் கிடைக்கிறது அல்லது மருத்துவ உதவிகள் சரிவரக் கிடைக்கின்றனவா என்பதே மிகுந்த சந்தேகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP