Showing posts with label தயார். Show all posts
Showing posts with label தயார். Show all posts

அல் - காய்தாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஏமன் அறிவிப்பு

>> Monday, January 11, 2010

பயங்கரவாதத்தை கைவிட்டு விட்டு ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வரும் அல் - காய்தா தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஏமன் நாட்டு அதிபர் அலி அப்துல்லா சலேக் அறிவித்துள்ளார். அல் - காய்தா தீவிரவாதிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏமனை அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில், அலி அப்துல்லா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அல் - காய்தா சவால்களை சமாளிக்க தமது அரசாங்கம் உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்றும், வன்முறையை கைவிட மறுக்கும் அல் - காய்தாவினரை ராணுவத்தினர் ஒடுக்குவார்கள் என்றும் அலி அப்துல்லா மேலும் தெரிவித்துள்ளார் .

Read more...

இந்தியாவுடன் 1000 ஆண்டு யுத்தத்திற்கு தயார்: சர்தாரி

>> Thursday, January 7, 2010

காஷ்மீர் பிரச்னைக்காக இந்தியாவுடன் 1000 ஆண்டுகள் கொள்கை யுத்தம் நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி கூறியுள்ளார்.

ஆஸாத் ஜம்மு காஷ்மீர் சட்டசபை மற்றும் காஷ்மீர் கவுன்சிலின் கூட்டுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்த அவர், இது (காஷ்மீர் பிரச்னை) ஒரு கொள்கை யுத்தம் என்றும், தலைமுறைத் தலைமுறையாக இது நீடிக்கும் என்றும் கூறினார். 


காஷ்மீர் பிரச்னையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் ஜனநாயக அரசுகள் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிராந்திய அமைதிக்கும், நீண்ட காலமாக இருந்துவரும் காஷ்மீர் பிரச்னைக்கான தீர்வுக்கும் தொடர்பு உள்ளதாகவும் கூறிய சர்தாரி, காஷ்மீருக்கான அமைதியிலிருந்து பிராந்திய அமைதியை பிரித்துவிட முடியாது என்றார்.

இந்த எண்ணத்தை உலக நாடுகளிடையே பாகிஸ்தான் பரப்பி வருவதாகவும், தொடர்ந்து அதனை முன்னெடுத்து செல்ல இருப்பதாகவும் அவர் கூறினார்.

காஷ்மீர் பிரச்னை தொடர்பாக சர்வதேச சமூகம் ஒரு முக்கியமான முடிவை எடுப்பதற்கான நேரம் விரைவிலேயே வரும் என்றும், அமைதியாக வாழ்வதற்கு இந்தியாவும், பாகிஸ்தானும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சர்தாரி மேலும் தெரிவித்தார்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP