Showing posts with label எண்ணிக்கை. Show all posts
Showing posts with label எண்ணிக்கை. Show all posts

ஹைட்டி பூகம்பத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தையும் தாண்டுகிறது

>> Thursday, January 14, 2010

கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைட்டி தீவுகளில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1 லட்சம் பேர்களையும் கடந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் இறந்த உடல்கள் சிக்கியுள்ளன. மேலும் இடிபாடுகளில் எவ்வள்வு பேர் உயிருடன் சிக்கியுள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை.

சேதமும், உயிர்ழப்பும் கற்பனைக்கு எட்ட முடியாத அளவில் உள்ளதால் ஏழை நாடான ஹைட்டியிற்கு ஐ.நா. ரூ. 500 கோடி நிவாரணம் அளித்துள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குவியல் குவியலாக பிணங்கள் சாலைகள் எங்கும் குவிக்கப்பட்டுள்ளன.

ரிக்டர் அளவு கோலில் 7.3 என்று பதிவான இந்த நில நடுக்கத்தில் நாடாளுமன்ற கட்டிடம் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டிடங்கள் தரைமட்டமாயின. பூகம்பத்தில் சிக்கிய இந்தியர்களின் நிலவரம் என்னவென்று தெரியவில்லை.

பல நாடுகளிலிருந்தும் மீட்புப் பணிகளும், உதவிகளும் ஹைட்டி நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றன.

Read more...

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது

>> Friday, January 8, 2010


ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்பு படிப்பதற்காக விசா கோரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஜூலை அக்டோபர் காலத்தில் 46 வீதம் குறைந்து விட்டதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய மாணவர்கள் மீது மெல்போர்னிலும், சிட்னியிலும் நடந்த தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு விசா விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.

மெல்போர்னில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இந்திய அரசு இவ்வார முற்பகுதியில் பயண எச்சரிக்கை ஒன்றை அளித்துள்ளது.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP