ஆப்பிரிக்க கோப்பை போட்டிகள் ஆரம்பம்

>> Sunday, January 10, 2010


டோகோ அணி போட்டியில் பங்குபெறுமா இல்லையா என எழுந்த குழப்பங்களுக்கு மத்தியில், ஆப்பிரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்காக போட்டியிடும் நாடுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டிகளில் பங்குபெறுகின்றன.
ஆரம்பப் போட்டியில், போட்டிகளை நடத்தும் அங்கோலா நாட்டின் அணி , மாலி அணியை சந்திக்கவுள்ளது.
தலைநகர் லுவாண்டாவுக்கு வெளியயே உள்ள புதிய விளையாட்டரங்கில், ரசிகர்கள் ஏற்கனவே கூடியுள்ளனர்.
அங்கு விளையாட்டரங்கில் உற்சாகம் களைகட்டியுள்ளதாக அங்குள்ள பிபிசி நிருபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அங்கோலாவின் விளையாட்டு சரித்திரத்தில் மிகப்பெரிய பெருமைக்குரிய இந்த தினம், கபிந்தாவில் டோகோ அணியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து சோகத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP