Showing posts with label கிளர்ச்சிக். Show all posts
Showing posts with label கிளர்ச்சிக். Show all posts

தாக்குதலை நியாயப்படுத்த டோகோ கிளர்ச்சிக் குழு தலைவர் முயற்சி

>> Monday, January 11, 2010

இதனிடையே நாடு கடந்த நிலையில் பிரான்ஸில் வாழ்ந்து வரும் அங்கோலாவின் ஒரு கிளர்ச்சிக் குழுவின் தலைவர், டோகோ நாட்டு அணி மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அங்கோலாவில் போர் நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.
ஃபிளெக் எனப்படும் கபிண்டா பிரிவினைவாதக் குழுவினருக்காக பேசவல்லவர் என்று தன்னை கூறிக் கொள்ளும் ரோட்ரிக்ஸ் மின்காஸ், கபிண்டாப் பகுதியில் ஆப்பிரிக்க கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் நடத்துவதை எதிர்த்து, ஏற்கனவே ஆப்பிரிக்க கால்பந்து சம்மேளனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது எனக் கூறுகிறார்.
இது போன்ற தாக்குதல்கள் தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும், இது வன்முறையை தூண்டும் ஒரு செயல் என்றும் தெரிவித்துள்ள பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம், எனினும் இந்தக் கருத்துக்கள் புறந்தள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP