தில்லி விளையாட்டு கிராமத்தில் தீ விபத்து

>> Sunday, January 10, 2010


இந்திய தலைநகர் புது தில்லியில் இந்த வருடம் நடக்கவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டிகளுக்காக நிர்மாணிக்கப்பட்டுவரும் விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கான விளையாட்டுக் கிராமத்தில் தீ பற்றிக்கொண்டதில், ஒரு பெண் கொல்லப்பட்டதுடன், மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
நிர்மாணப் பணியாளர்களுக்கான வதிவிட விடுதியில் இந்த தீ ஏற்பட்டது.
நிர்மாணிக்கப்பட்டுவருகின்ற ரக்பி விளையாட்டரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டு இரு வாரங்களின் பின்னர் தற்போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திட்டமிட்ட காலப்பகுதிக்குள் சில முக்கிய நிர்மாணங்களை முடிக்க முடியாமல் போய்விடும் என்று எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில், பணிகளை விரைவாக முடிக்கும் அழுத்தங்களுக்கு நிர்வாகிகள் உட்பட்டுள்ளனர்

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP