ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது
>> Friday, January 8, 2010

ஆஸ்திரேலியாவுக்கு மேற்படிப்பு படிப்பதற்காக விசா கோரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஜூலை அக்டோபர் காலத்தில் 46 வீதம் குறைந்து விட்டதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.
2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் இந்திய மாணவர்கள் மீது மெல்போர்னிலும், சிட்னியிலும் நடந்த தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு விசா விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.
மெல்போர்னில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா செல்ல விரும்பும் மாணவர்களுக்கு இந்திய அரசு இவ்வார முற்பகுதியில் பயண எச்சரிக்கை ஒன்றை அளித்துள்ளது.
