கோபன்ஹேகன் மாநாடு பெரும் தோல்வி என்கிறது ஸ்வீடன்
>> Tuesday, December 22, 2009
கோபன்ஹேகனில் சென்றவாரம் நடந்து முடிந்த காலநிலை மாநாடு ஒரு பெருந்தோல்வி என்று ஸ்வீடன் சுற்றாடல் அமைச்சர் அந்திரியாஸ் கார்ல்க்ரென் வர்ணித்துள்ளார்.
பருவநிலை மாற்றம் தொடர்பில் அடுத்து என்ன செய்வது என்று விவாதிக்கும் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களின் கூட்டத்துக்காக பிரஸ்ஸல்ஸ் வந்திறங்கிய கார்ல்ஜென், நிஜமாகவே மாநாடு ஒரு மாபெரும் தோல்வி என்று கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியமும், உலகின் மற்ற பாகங்களும், இதிலிருந்து ஒரு பாடம் கற்றுக்கொண்டு,மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பருவநிலை மாற்றம் தொடர்பான கோபன்ஹேகன் மாநாடு சிரமங்களும் சிக்கல்களும் நிறைந்திருந்தது என்றும் இதில் சிறியதொரு முன்னேற்றமே காணப்பட்டுள்ளது என்றும் ஜெர்மன் சுற்றுச்சூழல் அமைச்சர் நொர்பெர்ட் ரொயெட்ஜென் வர்ணித்துள்ளார்.
0 comments:
Post a Comment