கோபன்ஹேகன் மாநாடு குறித்து சில நாடுகள் மீது பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது
>> Tuesday, December 22, 2009
கோபன்ஹேகன் காலநிலை மாநாடு சில நாடுகளின் சிறிய குழு ஒன்றால் பணையம் வைத்து நெருக்கடிக்கு தள்ளப்பட்டுவிட்டது என்று பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுண் கூறியுள்ளார்.
கோபன்ஹேகனில் முக்கிய உடன்பாடு ஏற்படுவதை சீனா தடுத்துவிட்டது என்று அவரது அமைச்சர்களின் ஒருவரான எட் மிலிபாண்ட் குற்றஞ்சாட்டியிருந்தார்.
தனது பங்குக்கு சீனா, புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களை வெளியேற்றுவதை அதிகரிக்கச் செய்ய அனுமதித்ததாக அமெரிக்கா போன்ற செல்வந்த நாடுகளை குற்றஞ்சாட்டியுள்ளது.
நடைமுறைகள் குறித்த விவகாரங்களில் அதிக நேரம் வீணடிக்கப்பட்டதாக கூறுகிறார், இந்த மாநாட்டின் அதிகமான அமர்வுகளுக்கு தலைமை தாங்கிய டென்மார்க் நாட்டின் முன்னாள் காலநிலை அமைச்சரான கொன்னி கெடகார்ட்.
வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் எந்தவொரு நாடும் சரியான கரிசனை காட்டவில்லை என்று தான் ஏமாற்றமடைந்திருந்ததாகவும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment