கப்பல் பழுது நீக்கம் :28 இந்தியர் தப்பினர்

>> Tuesday, December 22, 2009

இன்ஜின் கோளாறால் கடலில் தத்தளித்த 28 இந்தியர்கள் அடங்கிய சரக்குக் கப்பல், பழுது நீக்கப்பட்டு, நேற்று போர்ட்லாந்து புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து அலாஸ்காவில் இருந்து அமெரிக்க கடலோரக் காவல் படையைச் சேர்ந்த அதிகாரி சீன் டெர்ரி கூறியதாவது:சீனாவில் இருந்து அமெரிக்காவின் போர்ட்லாந்து நோக்கிச் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் ஏ.பி.ஜே.,சூர்யாவீர். இந்த சரக்குக் கப்பலில் திடீரென ஏற்பட்ட இன்ஜின் கோளாறால், அது, அலாஸ்கா கடற்பகுதியில் நிறுத்தப்பட்டது. கடலில் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக, நிலைமை மிகவும் மோசமானது.இதையடுத்து அவர்கள், அமெரிக்க கடலோரக் காவல் படையின் உதவியை கோரினர். இந்நிலையில், அந்த கப்பலில் இருந்த இன்ஜினியர்கள், அதன் இன்ஜினை உள்ளூர் நேரப்படி, இன்று (நேற்று) காலை 8.20 மணியளவில் சரி செய்தனர். அதன் பின், அந்த கப்பல், போர்ட்லாந்து புறப்பட்டுச் சென்றது.அந்த கப்பலில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இவ்வாறு சீன் டெர்ரி கூறினார்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP