இரானில் அயதுல்லாவின் உடலடக்கத்தின் போது மோதல்கள்

>> Tuesday, December 22, 2009







இரானில் அரசுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த மூத்த மதகுருக்களில் ஒருவரான கிராண்ட் அயதுல்லா ஹொஸைன் மொண்டசாரியின் இறுதி நிகழ்வுகளில், நாட்டின் பாதுகாப்பு படையினருக்கும் எதிர்கட்சிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.


புனித நகரமான குவாமில் இடம் பெற்ற அவரது நல்லடகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு முக்கிய எதிர்கட்சித் தலைவர்களான மிர் ஹொஸைன் முசவியும், மெஹ்டி கரூபியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவரது நல்லடக்கத்தின் போது, அங்கு அஞ்சலி செலுத்த வந்திருந்த்வர்கள் அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

மொண்டசாரியின் இறுதி நிகழ்வுகளின் போது பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிகழ்வானது எதிகட்சியினரின் போராட்டங்களுக்கு ஒரு உந்துதலை அளித்துள்ளது என்றும், இந்த வாரத்தில் அது மேலும் பரவலாம் என்றும் டெஹ்ரானில் இருக்கும் பிபிசியின் செய்தியாளர் கூறுகிறார்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP