கடன் பிரச்சினை தொடர்பில் துபாய் வேர்லட் நிறுவனம் பேச்சுவார்த்தை

>> Tuesday, December 22, 2009


துபாய் அரசாங்கத்துக்குச் சொந்தமான முதலீட்டு நிறுவனமான துபாய் வேர்ல்ட் நிறுவனம், தனது 20 பில்லியன் டாலர்கள் பெறுமதியான கடனை மாற்றியமைப்பது குறித்து தனக்கு கடன் வழங்கியவர்களுடன் பேச்சு நடத்துகின்றது.

தனது நிதி நிலைமை குறித்து துபாய் வேர்ல்ட் தனது வங்கிகளுக்கு விபரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அந்தப் பிராந்திய பங்குச் சந்தைகளில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிகழ்வாக கருதப்படுகின்ற, தனது கடனைத் திருப்பித்தருவதற்கு தாமதமாகும் என்று துபாய் வேர்ல்ட் அறிவித்த நிகழ்வுக்குப் பின்னர் நடக்கின்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP