>> Tuesday, December 22, 2009
புலி ஒன்றை கொன்று, தின்ற குற்றத்துக்காக சீனாவைச் சேர்ந்த ஒருவருக்கு 12 ஆண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் தென் மாகாணமான, யூனானில் தான் மீன் பிடிக்கச் செல்லுகையில், புலி தன்னை தாக்க வந்ததாகவும், தான் தற்பாதுகாப்புக்காக எதிர்த்தாக்குதல் நடத்தியதில் அந்தப் புலி செத்துவிட்டதாகவும் சம்மந்தப்பட்ட நபர் கூறியுள்ளார்.
கொல்லப்பட்ட புலி, அழிவின் விளிம்பில் இருக்கும், இந்தோசீன வகை புலியினத்தை சேர்ந்த வனத்தில் வாழும் கடைசி புலியாக இருக்கலாம் என்று யூகம் நிலவுகிறது.
புலியின் இறைச்சியை உண்ட குற்றத்திற்காகவும், இந்த சம்பவத்தை மூடி மறைக்க முற்பட்ட குற்றத்திற்காகவும் வேறு நான்கு பேர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்
0 comments:
Post a Comment