கூவத்தை சுத்தப்படுத்த முடியுமா?
>> Tuesday, December 22, 2009
தமிழக தலைநகர் சென்னையின் நிரந்தர பிரச்சினை களில் ஒன்று அங்கே ஓடும் கூவம் ஆறு. கூவம் என்றதும், அதன் அழுக்கும், அதிலிருந்து வீசும் மூக்கை துளைக்கும் துர்நாற்றமும் தான் பலருக்கும் நினைவுக்கு வரும்.
அந்த நிலையை மாற்றப்போவதாக தமிழக அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டின் துணை முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் இதற்கான குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களில் திமுக தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தபோதெல்லாம் கூவத்தை சுத்தப்படுத்தி அதில் படகு விடப்போவதாக அறிவிப்புக்களை செய்திருந்தா லும், அவையெல்லாம் வெறும் அறிவிப்புக்களாகவே இருந்தனவே தவிர, அவற்றில் பெரிதாக முன்னேற் றம் எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், தமிழக அரசின் தற்போதைய அறி விப்பு உண்மையான பலன் தருமா அல்லது கடந்த கால அறிவிப்புக்களைப்போல செயலாக்கம் பெறா மலே போகுமா என்பதை ஆராயும் பெட்டகம். தயாரித்து வழங்குகிறார் சென்னை செய்தியாளர் டி என்.கோபாலன்.
0 comments:
Post a Comment