பாம்பு கடித்து மாணவர் பலி:
>> Tuesday, December 22, 2009
மதுரை மாவட்டம் வயலூரை சேர்ந்தவர் முத்தன் மகன் ரமேஷ். இவர் மதுரை பசுமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். விடுதியில் தங்கி படித்த இவரை கடந்த 19-ந்தேதி பாம்பு கடித்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட ரமேஷ் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு மாணவர் ரமேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாப மாக இறந்தார். சரியான சிகிச்சை அளிக்காததால் தான் மாணவர் இறந்து விட்டார் என்று கூறி கல்லூரி மாணவர்கள் ரமேசின் உடலை ஆஸ்பத்திரி முன்பாக ரோட்டில் போட்டு மறியல் செய்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் தேன்மொழி மற்றும் அதிகாரிகள் நடத்தி பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொண்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.
இன்று காலை இறந்த மாணவர் ரமேசின் உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அந்த அறை முன்பு கல்லூரி மாணவர்கள், உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர். பாம்பு கடித்த மாணவருக்கு சரியான சிகிச்சை அளிக்காத டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும், மாணவர் ரமேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி மாணவர்கள் கோரிப்பாளையம் தேவர் சிலை முன்பு மறியல் செய்ய முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.
தொடர்ந்து மாணவர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு மீண்டும் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்ததும் துணை போலீஸ் கமிஷனர் தேன்மொழி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்தனர். உடனே போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தினர். இதையடுத்து மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த சம்பவம் தொடர் பாக 12 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே ஒரு சில மாணவர்கள் அந்த வழி யாக வந்த பஸ்கள் மீது சரமாரியாக கற்களை வீசினர். தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமான போலீசார் ஆஸ்பத்திரி முன்பு குவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் எல்லாளன் தலைமையில் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment