"பாகிஸ்தானின் அதிபர் சில அதிகாரங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்":எதிர்கட்சிகள் கோரிக்கை

>> Tuesday, December 22, 2009


பாகிஸ்தானில் அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி தனது அதிகாரங்களில் சிலவற்றை விட்டுக் கொடுக்காவிட்டால் அங்கு அவர் போராட்டங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று முக்கிய எதிர்கட்சி எச்சரித்துள்ளது.

அரசியல் ஊழல் குற்றசாட்டுகள் தொடர்பில் அவருக்கும் எதிர்கட்சிகளுக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

ஆனாலும் சட்டவிரோதமான வகையில் ஜர்தாரி அவர்களையோ அல்லது அவரது அரசையோ பதவியிலிருந்து அகற்றும் எந்த நடவடிக்கையையும் தாங்கள் ஆதரிக்கப் போவதில்லை என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம், ஊழல் வழக்குகளை எதிர்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு பொது மன்னிப்பபு வழங்கும் ஒரு ஆணையை சட்டவிரோதமானது என்று அறிவித்தது.

பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்களும் அடங்குவர். இதையடுத்து அங்கு அரசியல் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP