இரானில் மூத்த மதகுரு ஒருவரின் வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைப்பு

>> Wednesday, December 23, 2009


கடந்த ஞாயிறன்று காலமான இரானின் செல்வாக்கு மிகுந்த, அரசுக்கு எதிரான கொள்கையை கொண்டிருந்த அதியுயர் மதத்தலைவர்களில் ஒருவரான அயதொல்லா ஹொசைன் அலி மொண்டசாரிக்கு அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பு விடுத்த மூத்த மதகுரு ஒருவரின் வீட்டை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளதாக எதிர்க்கட்சியினரின் இணையத்தளங்கள் கூறுகின்றன.

இஸ்ஃபகானில் நடந்த வைபவத்தில் பொதுமக்கள் கலந்துகொள்வதை பாதுகாப்புப் படையினர் தடுத்த போது மோதல்கள் வெடித்ததாக அந்த இணையத்தளங்கள் கூறுகின்றன.

திங்களன்று குவாமில் நடந்த அஞ்சலி நிகழ்வும் இடையூறு செய்யப்பட்டது.

எதிர்க்கட்சியினரின் போராட்டங்களுக்கான ஆதரவு பல இடங்களுக்கும், முதியவர்கள் மற்றும் மத ரீதியிலான பழமைவாதிகள் மத்தியிலும் பரவுவதாகத் தென்படுவதாக பிபிசியின் தெஹ்ரானுக்கான நிருபர் கூறுகிறார

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP