பெண்ணை கொடுமை செய்தவர்களுக்கு காது மற்றும் மூக்கை வெட்ட உத்தரவு

>> Tuesday, December 22, 2009


பாகிஸ்தானில் இரு ஆண்களுக்கு அவர்களது மூக்கையும் காதுகளையும் வெட்டி எடுத்துவிடுவது என்ற ஒரு தண்டனையை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இவர்கள் இருவரில் ஒருவரை திருமணம் செய்துகொள்ள மறுத்திருந்த பெண்ணொருத்தியின் மூக்கையும் காதுகளையும் இவர்கள் வெட்டியிருந்தனர்.


பெண்ணைக் கடத்தி சித்ரவதை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆடவர் இருவருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.


கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்ற இஸ்லாமிய தண்டனை விதிக்கு ஏற்ப இந்த தீர்ப்பை வழங்குவதாக லாகூர் நகர நீதிபதி கூறியுள்ளார்.


ஆனால் கடந்த காலங்களில் இவ்வகையான தண்டனைகள் மேல்முறையீட்டின்போது மாற்றப்பட்டு வந்துள்ளன என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP