கம்ப்யூட்டர் தகவலை தகர்த்து ஐந்து கோடி ரூபாய் கொள்ளை
>> Tuesday, December 22, 2009
"ஹேக்கிங்' என்பது கம்ப்யூட்டர் மென்பொருளில் இருந்து அடிப்படைத் தகவல்களை திருடும் நுண்கலையாகும். இதை இத்துறையில் சாமர்த்தியம் நிறைந்தவர்கள் மட்டுமே கையாள முடியும். ஆகவே, ரஷ்யாவில் உள்ள நுணுக்கம் தெரிந்த, "சைபர் குழு' ஈடுபட்டிருக்கிறது என்று சந்தேகிக்கப்படுகிறது.இது குறித்து அமெரிக்காவின் வால்ஸ்டிரீட் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:சிட்டி வங்கியின் முதன்மை நிறுவனமான, சிட்டி குழுமத்தில், அரசுக்கு தற்போது 27 சதவீதம் பங்குகள் உள்ளன. ரஷ்ய வர்த்தக நெட்வொர்க்கில் இருந்து, இணையதள முகவரி மூலமாக, சந்தேகப்படும் வகையிலான பரிவர்த்தனைகள் நடைபெறுவதை, அமெரிக்க முதலீட்டாளர்களே முதலில் கண்டறிந்தனர்.
இதற்கு தேவையான சாதனங்கள் மற்றும் மென்பொருட்களை ரஷ்ய குழு ஒன்று விற்பனை செய்கிறது.இவர்கள், பணத்தை கொள்ளையடிப்பதோடு, வங்கி தொடர்பான தகவல்களை அழித்துவிடலாம் என, பாதுகாப்பு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். நியூயார்க் நகரைச் சேர்ந்த ராபர்ட் பிளான்கார்டு என்பவர், யாரோ, சிட்டி வங்கியில் உள்ள தன் கணக்கில் இருந்து, ஐந்து கோடி ரூபாயை திருடியதாக தெரிவித்துள்ளார். பின்னர், அந்த பணம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment