>> Sunday, October 11, 2009
“மூன்றாவது உலகப் போர் என்று ஒன்று நிகழ்ந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும்’’ என்று ஒரு கருத்து உண்டு. அது நிஜம்தான். ஏனென்றால் இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் இந்தப் பிரச்னை இருக்கிறது. ஆசிய, ஆப் பிரிக்க நாடுகளில் இது மிகவும் அதிகம். எதிர்காலத்தின் தண்ணீர் தேவைக்காக ஒரு நாடு இன்னொரு நாட்டைப் பிடிக்கக் கூடிய அபாயம் உண்டு.
இந்தியாவைச் சுற்றி உள்ள சீனா, நேபாளம், மியான்மார், பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எல்லாம் மக்கள் தொகை அதிகம் கொண்ட, தண்ணீர் பிரச்னைகள் அதிகம் உள்ள நாடுகள். இவற்றில் பல ஆயுத பலங்களையும் கொண்டவை. நாளை இவை தண்ணீருக்காக இந்தியாவை தொந்திரவு படுத்தாது என்பது என்ன நிச்சயம்? சராசரி மனிதனுக்கான தண்ணீர் தேவைக்கு வேண்டிய தண்ணீர் உற்பத்தி மிகக் குறைவாக இருக்கிறது என்பதே புள்ளி விவரங்கள் காட்டும் பயங்கரமான உண்மை.
ஒரு பதினைந்து வருடங் களுக்கு முன்னால் கூட தண்ணீ ரைப் பிளாஸ்டிக் பாக்கெட்டு களிலும், பாட்டில்களிலும் எதிர்காலத்தில் அடைத்து வைப்பார்கள். அதைக் காசு கொடுத்து வாங்க வேண்டி யிருக்கும் என்பதை நாம் கற்பனை கூட செய்திருக்க மாட்டோம். ஆனால் அது இன்றைக்கு நடைமுறை ஆகி விட்டது. இயற்கை மனிதனுக் காக அன்போடு கொடுக்கும் அருட்கொடைத் தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்க வேண்டியிருப்பது கொடுமை யிலும் கொடுமை அல்லவா?
"நீரின்றி அமையா உலகு' என்பது எத்தனை தீர்க்க தரிசன மான சொல்! இன்றைக்கு குடிதண்ணீர் என்பதும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீர் என்பது மிகப்பெரிய வியாபாரமாகி விட்டது. இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு குடிதண் ணீர் விற்பனை ( நான் குறிப் பிடுவது பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் மட்டும் ) பத்தாயிரம் கோடிகளைத் தாண்டும் என்கி றார்கள்.
மிகப் பெரும் கம்பெனிகள் எல்லாம் இந்தத் தண்ணீர் விற்பனையில் குதித்திருக்கின்றன, கோக், பெப்ஸி போன்ற வெளி நாட்டுக் கம்பெனிகளும் இந்தியா வில் “பிளாண்டுகளை’’ ஆரம்பித்து தண்ணீர் விற்பனைகளை ஆரம் பித்திருக்கின்றன என்றால் இங்கே தண்ணீர் தேவை எத்தனை ராட்சசத்தனமாக பெருகி இருக் கிறது என்பதைப் புரிந்து கொள் வீர்கள்!
இது பெரும் ஆபத்து! தண்ணீருக்காக அடிதடியும், கலவரமும், யுத்தமும் ஏற்படக் கூடாது என்றால் அதற்குத் தேவை தீர்க்கத் தரிசனம் கொண்ட ஒரு லீடர்ஷிப். இளைஞர்களில் இருந்துதான் தண்ணீருக்கான அந்த இயக்கத்துக்குத் தலைமை தாங்கும் ஒருவர் வரவேண்டும். எதிர்காலத் தண்ணீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடியாகச் செய்ய வேண்டியது நதிநீர் இணைப்புத் திட்டம்தான் என்பதைப் புரிந்து கொண்டு அந்த இயக்கம் அதற் கான முன்முயற்சிகளை ஆரம் பித்தாக வேண்டிய காலகட்டம் இது.
"குளோபல் வார்மிங்' எனப் படும் உலக வெப்பமயமாகும் ஆபத்தான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொழிற் சாலைகளின் நச்சுக் கழிவுகள் நதிகளில் கலப்பதும், மணல் கொள் ளைகளும், நிலத்தடிநீரை அநியாயத்துக்கு உறிஞ்சு வதும் இப்படியே தொ டர்ந்து நடந்தால் இன்னும் ஐம்பது வருடங்களில் கங்கை போன்ற வற்றாத நதிகளே வறண்டு விடும் என்கிறார்களே சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், அதை நினைத்தாலே மனம் பதைபதைக்கவில்லையா? யமுனை நதியின் இப்போதைய நிலையைக் கண்டால் நம் இதயம் துடிக்கிறதே? நதிகளைச் சரிவரப் பராமரிக்காவிட்டால் என்ன ஆகும்? தமிழ்நாட்டிலேயே இதற்கு ஒரு உதாரணம் உண்டு.
காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று நொய்யல் ஆறு. கொங்கு நாட்டுப் பகுதியில் ஒரு காலத்தில் வெள்ளமென அதில் நீர் பாய்ந்து கொண்டிருந்தது. கிபி 1004-ம் வருடத்தில் இருந்து 1303 வரை சோழர் காலத்தில் நொய்யல் ஆற்றில் வாணிபமும் கப்பல் போக்குவரத்தும் ஜோராக நடந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சோழர்கள் ஏற்படுத்திய அருமையான நீர்ப்பாசனக் கால்வாய்களில் நொய்யல் ஆற்றின் தண்ணீர் பொங்கிப் பெருகி கொங்கு நாடெங்கும் விவசாய நிலங்களைப் பசுமையாக்கியது. 160 கி.மீ. நீளம் கொண்டிருந்த அந்த நொய்யல் ஆற்றில் 34 சிறு நதிகள் மற்றும் ஏராளமான கால்வாய்கள் கூடவே ஓடின என்பது சரித்திரம்.
ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழ். நொய்யல் ஆற்றைச் சுற்றியிருந்த சாயப்பட்டறைத் தொழிற் சாலைகள் தங்கள் கெமிக்கல் கழிவுகளை அநியாயமாக இந்த ஆற்றில் கலந்து அதை மாசுபடுத்தி சாக்கடை ஆக்கிவிட்டன.
அந்தக் கழிவுகளில் தாமிரம், துத்தநாகம், குரோமியம், ஏன், சயனைடு விஷம் கூடக் கலந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள் ளுங்கள்.
நொய்யலாற்றை கொன்றே விட்டார்கள் என்று சொல்லலாம். நொய்யல் மட்டுமல்ல, கொடகனாறு, பவானி, பாலாறு, அமராவதி, கூவம் என்று எத்தனையோ தமிழக நதிகள் இன்று வறண்ட பாலைவனங் களாகி விட்டது காலக் கொடுமை!
இதே போல் சாக்கடை யாகி விட்ட லண்டன் நகரத்து தேம்ஸ் நதியை நவீன முறைகளைக் கொண்டு சுத்தம் செய்து சாதனை படைத்திருக் கிறார்கள்.
அவர்களிடமிருந்தாவது நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நதிகள் மாசுபட்டும், தகுந்த தண்ணீர் கிடைக் காமலும் உயிரோடு இருந்து செழிக்க வேண்டுமென்றால், தண்ணீர் வெள்ளமென ஓடும் பிற நதிகளின் உபரித் தண்ணீரை அதிலே திருப்பி விடுவது ஒன்றுதான் சிறந்த வழி.
இது சாத்தியமா என்றால் சாத்தியம்! சாத்தி யம்! சாத்தியம்! நூறு சதவீதம் சாத்தியம்!
இந்தியாவைச் சுற்றி உள்ள சீனா, நேபாளம், மியான்மார், பங்களாதேஷ், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எல்லாம் மக்கள் தொகை அதிகம் கொண்ட, தண்ணீர் பிரச்னைகள் அதிகம் உள்ள நாடுகள். இவற்றில் பல ஆயுத பலங்களையும் கொண்டவை. நாளை இவை தண்ணீருக்காக இந்தியாவை தொந்திரவு படுத்தாது என்பது என்ன நிச்சயம்? சராசரி மனிதனுக்கான தண்ணீர் தேவைக்கு வேண்டிய தண்ணீர் உற்பத்தி மிகக் குறைவாக இருக்கிறது என்பதே புள்ளி விவரங்கள் காட்டும் பயங்கரமான உண்மை.
ஒரு பதினைந்து வருடங் களுக்கு முன்னால் கூட தண்ணீ ரைப் பிளாஸ்டிக் பாக்கெட்டு களிலும், பாட்டில்களிலும் எதிர்காலத்தில் அடைத்து வைப்பார்கள். அதைக் காசு கொடுத்து வாங்க வேண்டி யிருக்கும் என்பதை நாம் கற்பனை கூட செய்திருக்க மாட்டோம். ஆனால் அது இன்றைக்கு நடைமுறை ஆகி விட்டது. இயற்கை மனிதனுக் காக அன்போடு கொடுக்கும் அருட்கொடைத் தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்க வேண்டியிருப்பது கொடுமை யிலும் கொடுமை அல்லவா?
"நீரின்றி அமையா உலகு' என்பது எத்தனை தீர்க்க தரிசன மான சொல்! இன்றைக்கு குடிதண்ணீர் என்பதும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான தண்ணீர் என்பது மிகப்பெரிய வியாபாரமாகி விட்டது. இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு குடிதண் ணீர் விற்பனை ( நான் குறிப் பிடுவது பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் மினரல் வாட்டர் மட்டும் ) பத்தாயிரம் கோடிகளைத் தாண்டும் என்கி றார்கள்.
மிகப் பெரும் கம்பெனிகள் எல்லாம் இந்தத் தண்ணீர் விற்பனையில் குதித்திருக்கின்றன, கோக், பெப்ஸி போன்ற வெளி நாட்டுக் கம்பெனிகளும் இந்தியா வில் “பிளாண்டுகளை’’ ஆரம்பித்து தண்ணீர் விற்பனைகளை ஆரம் பித்திருக்கின்றன என்றால் இங்கே தண்ணீர் தேவை எத்தனை ராட்சசத்தனமாக பெருகி இருக் கிறது என்பதைப் புரிந்து கொள் வீர்கள்!
இது பெரும் ஆபத்து! தண்ணீருக்காக அடிதடியும், கலவரமும், யுத்தமும் ஏற்படக் கூடாது என்றால் அதற்குத் தேவை தீர்க்கத் தரிசனம் கொண்ட ஒரு லீடர்ஷிப். இளைஞர்களில் இருந்துதான் தண்ணீருக்கான அந்த இயக்கத்துக்குத் தலைமை தாங்கும் ஒருவர் வரவேண்டும். எதிர்காலத் தண்ணீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடியாகச் செய்ய வேண்டியது நதிநீர் இணைப்புத் திட்டம்தான் என்பதைப் புரிந்து கொண்டு அந்த இயக்கம் அதற் கான முன்முயற்சிகளை ஆரம் பித்தாக வேண்டிய காலகட்டம் இது.
"குளோபல் வார்மிங்' எனப் படும் உலக வெப்பமயமாகும் ஆபத்தான சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தொழிற் சாலைகளின் நச்சுக் கழிவுகள் நதிகளில் கலப்பதும், மணல் கொள் ளைகளும், நிலத்தடிநீரை அநியாயத்துக்கு உறிஞ்சு வதும் இப்படியே தொ டர்ந்து நடந்தால் இன்னும் ஐம்பது வருடங்களில் கங்கை போன்ற வற்றாத நதிகளே வறண்டு விடும் என்கிறார்களே சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், அதை நினைத்தாலே மனம் பதைபதைக்கவில்லையா? யமுனை நதியின் இப்போதைய நிலையைக் கண்டால் நம் இதயம் துடிக்கிறதே? நதிகளைச் சரிவரப் பராமரிக்காவிட்டால் என்ன ஆகும்? தமிழ்நாட்டிலேயே இதற்கு ஒரு உதாரணம் உண்டு.
காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று நொய்யல் ஆறு. கொங்கு நாட்டுப் பகுதியில் ஒரு காலத்தில் வெள்ளமென அதில் நீர் பாய்ந்து கொண்டிருந்தது. கிபி 1004-ம் வருடத்தில் இருந்து 1303 வரை சோழர் காலத்தில் நொய்யல் ஆற்றில் வாணிபமும் கப்பல் போக்குவரத்தும் ஜோராக நடந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? சோழர்கள் ஏற்படுத்திய அருமையான நீர்ப்பாசனக் கால்வாய்களில் நொய்யல் ஆற்றின் தண்ணீர் பொங்கிப் பெருகி கொங்கு நாடெங்கும் விவசாய நிலங்களைப் பசுமையாக்கியது. 160 கி.மீ. நீளம் கொண்டிருந்த அந்த நொய்யல் ஆற்றில் 34 சிறு நதிகள் மற்றும் ஏராளமான கால்வாய்கள் கூடவே ஓடின என்பது சரித்திரம்.
ஆனால் இன்றைக்கு நிலைமை தலைகீழ். நொய்யல் ஆற்றைச் சுற்றியிருந்த சாயப்பட்டறைத் தொழிற் சாலைகள் தங்கள் கெமிக்கல் கழிவுகளை அநியாயமாக இந்த ஆற்றில் கலந்து அதை மாசுபடுத்தி சாக்கடை ஆக்கிவிட்டன.
அந்தக் கழிவுகளில் தாமிரம், துத்தநாகம், குரோமியம், ஏன், சயனைடு விஷம் கூடக் கலந்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள் ளுங்கள்.
நொய்யலாற்றை கொன்றே விட்டார்கள் என்று சொல்லலாம். நொய்யல் மட்டுமல்ல, கொடகனாறு, பவானி, பாலாறு, அமராவதி, கூவம் என்று எத்தனையோ தமிழக நதிகள் இன்று வறண்ட பாலைவனங் களாகி விட்டது காலக் கொடுமை!
இதே போல் சாக்கடை யாகி விட்ட லண்டன் நகரத்து தேம்ஸ் நதியை நவீன முறைகளைக் கொண்டு சுத்தம் செய்து சாதனை படைத்திருக் கிறார்கள்.
அவர்களிடமிருந்தாவது நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
நதிகள் மாசுபட்டும், தகுந்த தண்ணீர் கிடைக் காமலும் உயிரோடு இருந்து செழிக்க வேண்டுமென்றால், தண்ணீர் வெள்ளமென ஓடும் பிற நதிகளின் உபரித் தண்ணீரை அதிலே திருப்பி விடுவது ஒன்றுதான் சிறந்த வழி.
இது சாத்தியமா என்றால் சாத்தியம்! சாத்தி யம்! சாத்தியம்! நூறு சதவீதம் சாத்தியம்!
0 comments:
Post a Comment